விளக்கு திரியின் பலன்கள்

விளக்கு திரியின் பலன்கள்



காலையில் உஷத் காலத்திலும் , மாலையில் சூரிய அஸ்தமனத்துக்கு முன்பும் வீட்டில் தீபம் ஏற்ற வேண்டும் . இரண்டு திரி சேர்த்து முறுக்கி ஏற்றுவது நலம் . தீபத்தை கிழக்கு , மேற்கு மற்றும் வடக்கு ஆகிய திசைகளை நோக்கி தீபம் ஏற்ற வேண்டும் . தெற்கு முகம் பார்த்து தீபம் ஏற்றுவதை தவிர்க்கவும் .

ஒரு திரி ஏற்றும் போது கிழக்கு திசை நோக்கி ஏற்றவும் . நாம் ஏற்றும் திரியை பொறுத்து அதற்கு உண்டான பலன்களை அடையலாம் . புதிய மஞ்சள் துணி திரி போட்டு விளக்கு ஏற்றினால் செய்வினை , தீயசக்திகள் , தொந்தரவுகள் அண்டாது . பஞ்சு திரி மங்களம் பெருகும் .

வாழை தண்டு திரி புத்திர பாக்கியம் , பட்டு நூல் திரி எல்லாவித சுபங்களும் , ஆமணக்கு எண்ணெய் தீபம் அனைத்து செல்வம் , தேங்காய் எண்ணெய் இலப்பெண்ணெய் தீபம் தேக ஆரோக்கியம் , செல்வம் , நல்லெண்ணெய் தீபம் எம பயம் அகலும் .

தாமரை நூல் தீபம் லக்ஷ்மி கடாக்ஷம் நெய் தீபம் சகல சௌபாக்யம் , வெண்கல விளக்கு , பாவம் அகலும் , அகல் விளக்கு , சக்தி பெருகும் . எவெர் சில்வர் தவிர்க்கவும் , தீபத்தை பூவின் காம்பினால் அணைக்கவும் . வாயினால் ஊதக்கூடாது . தீப சரஸ்வதி என்று மூன்று முறையும் , தீப லக்ஷ்மி என்று மூன்று முறையும் , தீப துர்கா என்று மூன்று முறையும் , குல தெய்வத்தை நினைத்து மூன்று முறையும் என தீபத்தை பன்னிரண்டு முறை வணங்க வேண்டும் .

திசைகளும் பலன்களும் ..........

1 . கிழக்கு - இந்தத் திசையில் தீபம் ஏற்றி வழிபட்டால் துன்பம் ஒழியும் . வீட்டில் உள்ள பீடைகள் அகலும் .
2 . மேற்கு - இந்தத் திசையில் தீபம் ஏற்றி வழிபட்டால் கடன் தொல்லை , சனிபீடை , கிரகதோஷம் பங்களிப்பதை இவை நீங்கும் .
3 . வடக்கு - இந்தத் திசையில் தீபம் ஏற்றி வழிபட்டால் செல்வமும் , மங்கலமும் பெருகும் .
4 . தெற்கு - இந்தத் திசையில் தீபம் ஏற்றக்கூடாது . இது பெரும் பாவம் , அபசகுணம் .

கருத்துரையிடுக

குறை அல்லது நிறை எதாவது சொல்லிட்டு போங்க பாஸ்

புதியது பழையவை