54 அரசு பள்ளிகளில் தமிழ் பயிற்று மொழியாக இல்லையா? ஆர்.டி.ஐ.,யில் அம்பலம்

 


சென்னை: தமிழகத்தில் உள்ள 54 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் தமிழ் பயிற்று மொழியாக இல்லை என தகவல் அறியும் உரிமை சட்டத்தின் (ஆர்.டி.ஐ) மூலம் அம்பலமாகியுள்ளது.


தமிழக அரசு, மும்மொழி கொள்கையை தொடர்ந்து எதிர்த்து வருகிறது. தமிழக அரசு பள்ளிகளில் தமிழ், ஆங்கிலம் பயிற்று மொழியாக கொண்ட இருமொழி கொள்கையே பின்பற்றப்பட்டு வருகிறது. இந்நிலையில், தமிழகத்தில் ஆங்கிலம் மட்டுமே பயிற்று மொழியாக கொண்ட அரசு பள்ளிகள் எண்ணிக்கை குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு, 54 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் ஆங்கிலம் மட்டுமே பயிற்றுமொழியாக கொண்டு செயல்படுவதாகவும், இந்த பள்ளிகளில் தமிழ் பயிற்று மொழியாக இல்லை என தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
இந்த பள்ளிகள் சென்னை, செங்கல்பட்டு, ஈரோடு, சேலம், கிருஷ்ணகிரி, திருப்பூர், நீலகிரி, சிவகங்கை, கடலூர் உள்ளிட்ட 17 மாவட்டங்களை சேர்ந்தவை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளன. இது தமிழ் ஆர்வலர்கள் மற்றும் கல்வியாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கூறுகையில், ‛தமிழ் மொழி, பயிற்று மொழியாக இல்லை எனக் கூறி விட முடியாது. 54 அரசு பள்ளிகளில் ஆங்கிலம் மட்டுமே பயிற்று மொழியா என விசாரிக்கப்படும்' என்றார்.

கருத்துரையிடுக

குறை அல்லது நிறை எதாவது சொல்லிட்டு போங்க பாஸ்

புதியது பழையவை