நாளை அரசு விடுமுறை... 7 நாட்கள் துக்கம் அனுசரிப்பு!


சென்னை: திமுக., தலைவர் கருணாநிதி காலமானதை முன்னிட்டு , நாளை அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 7 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தி.மு.க., தலைவர் கருணாநிதிக்கு, கடந்த ஜூலை 18ல், உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து ஆழ்வார்பேட்டை, காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு செயற்கை சுவாசக் கருவி அகற்றப்பட்டது.

இதையடுத்து கருணாநிதிக்கு நோய் தொற்று உருவானது. வீட்டில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டநிலையில் அவரது உடல் நிலை மிகவும் மோசமானது.
இதைதொடர்ந்து, காவேரி மருத்துவமனையில், தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டார்.
நேற்று மாலை அவரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவ அறிக்கையில் தொிவிக்கப்பட்டது. இந்நிலையில் இன்று மாலை 6.10 மணியளவில் சிகிச்சை பலனின்றி காலமானதாக அறிக்கை வெளியிடப்பட்டது. இதையடுத்து நாளை அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 7 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Share on Google Plus

About உதயம் மலர்

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.