வாஜ்பாய் மறைவு தமிழகத்தில் நாளை அரசு விடுமுறை!!

முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் மறைவையொட்டி தமிழகம் முழுவதும் நாளை அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வாஜ்பாயின் இறுதிச்சடங்கு நாளை மாலை 5 மணிக்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 
முன்னாள் பிரதமரும், பா.ஜ.கவின் மூத்த தலைவருமான வாஜ்பாய் உடல்நலக்குறைவு காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் இன்று மாலை 5.05 மணிக்கு உயிரிழந்ததாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
அவரது மறைவையொட்டி, பிரதமர்மோடி, ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, பல்வேறு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இன்று மாலை 6.30 மணிக்கு நாடாளுமன்ற சிறப்பு அவை கூடி வாஜ்பாய் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து இன்று முதல் 7 நாட்களுக்கு துக்கம் அனுசரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நாடாளுமன்றத்தில் தேசியக்கொடி அரைக்கம்பத்தில் பறக்க விடப்பட்டுள்ளது.
தொடர்ந்து அவரது உடல் இறுதி அஞ்சலிக்காக பா.ஜ.க தலைமை அலுவலகத்தில் வைக்கப்படுகிறது. டெல்லி விஜய்கோட்டில் அவரது உடல் நாளை மாலை 5 மணிக்கு நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.
Share on Google Plus

About உதயம் மலர்

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.