பால சுப்ரமண்யனே வா வா –என
இச்சையெல்லாம் உன் மேல் வைத்தேன் –அதில்
எள்ளளவும் ஐயமில்லையே - பச்சை
கொச்சை மொழியானாலும் உன்னைக்
கொஞ்சிக் கொஞ்சிப் பாடிடுவேன் – எந்தன்
சர்ச்சையெல்லாம் அகன்றதப்பா – எங்கும்
சாந்தி நிலவுதப்பா - பச்சை
நெஞ்சமெனும் கோவிலமைத்தே – அதில்
நேர்மையெனும் தீபம் வைத்தே
செஞ்சிலம்பு கொஞ்சிடவே வா – வாவா
சேவல் கொடி மயில் வீரா - பச்சை
வெள்ளமது பள்ளம் தனிலே – பாயும்
தன்மைபோல் உள்ளம் தனிலே – நீ
மெல்ல மெல்லப் புகுந்து வீட்டாய் – முருகா
கள்ள மெல்லாம் கரைந்ததப்பா - பச்சை
அலைகடல் ஓரத்திலே எங்கள்
அன்பான சண்முகனே – நீ
அலையாய் வரம் தருவாய் – உனக்கு
ஆனந்த கோடி நமஸ்காரம் - பச்சை