உஷார்! உங்க மொபைலில் வாட்ஸ்அப் உள்ளதா? இதை உடனே படிக்கவும்..

வாட்ஸ்அப் மூலம் வதந்தி மற்றும் தவறான தகவல்களை பரப்புவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என வாட்ஸ்அப் நிறுவனம் எச்சரித்துள்ளது.
குழந்தைக்கடத்தல் உள்பட வாட்ஸ்அப்பில் பரவும் வதந்திகளால் பல அசம்பாவிதங்கள் நடைபெறுவது தொடர்கதையாகிவிட்டது. இதுகுறித்து வேதனை தெரிவித்திருந்த உச்சநீதிமன்றம் உடனடி நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அரசுக்கு அறிவுறுத்தியிருந்தது. இதுகுறித்த தகவலை வாட்ஸ்அப் நிறுவனத்துக்கு மத்திய அரசு தெரியப்படுத்தியிருந்தது.
இந்நிலையில், வதந்தி மற்றும் தவறான தகவல்களை வாட்ஸ்-அப்பில் பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மத்திய அரசுக்கு அந்நிறுவனம் விளக்கமளித்துள்ளது. இவ்விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள், தகவல் தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் பொதுமக்களின் ஒத்துழைப்பும் அவசியமாகிறது என்று தனது விளக்கத்தில் வாட்ஸ்அப் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
எனவே, இனி நம்பகமில்லாத வாட்ஸ்அப் ஃபார்வேடு எதாவது வந்தால், அதை பரப்பாமல் உஷாராக இருங்க மக்களே..இல்லையேல் விபரீதமாகிவிடும்!
Share on Google Plus

About உதயம் மலர்

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.