Recent Posts

Labels

உதயம் மலர்

உதயம் மலர்

Contact form

Search This Blog

3/related/default
Developed by ❤️ - Blogger Templates at Piki Templates | Distributed by Free Blogger Templates

Made with Love by

Monster Template is Designed Theme for Giving Enhanced look Various Features are available Which is designed in User friendly to handle by Piki Developers. Simple and elegant themes for making it more comfortable

CSR FIR என்றால் என்ன?

18 செப்., 2022


அதிகரித்து வரும் சி.எஸ்.ஆர்!!!

குறைந்த வரும் எப்.ஐ.ஆர்.!!!


பலன் தருமா காவல் துறையின் நடவடிக்கை?


தமிழக காவல் நிலையங்களில்

புகார் கொடுக்கும்போது, அது முதலில், சி.எஸ்.ஆரில் பதிவாகி, ரசீதாக புகார்தாரருக்கு கொடுக்கப்படுகிறது என்பதே பலருக்குத் தெரிவதில்லை.காவல் துறை குறித்த மக்களின் விழிப்புணர்வு இப்படி இருக்க, காவல் துறையினர் சிரத்தையுடன் மேற்கொள்ளும் சி.எஸ்.ஆர்., பதிவு, அவர்களின் நன்மதிப்புக்கு 'வேட்டு' வைத்திருக்கிறது. 'சி.எஸ்.ஆர்., பதிவு என்பது, போலீசார் நடத்தும் வெறும் கண் துடைப்பு நாடகமே' என, சமீப காலமாய், இப்பதிவு கடும் விமர்சனத்திற்கு உள்ளாகி இருக்கிறது. 


இந்நிலையில், 'காவல் நிலையத்தில் பதிவாகும் குற்றங்களின் எண்ணிக்கையை குறைத்து காட்டுவதற்குத் தான், சி.எஸ்.ஆர்., பதிவு நடைபெறுகிறது' என்ற குற்றச்சாட்டில் உண்மை உள்ளதா? சி.எஸ்.ஆர்., மூலம் பொதுமக்களின் புகார்களுக்கு நியாயம் கிடைக்கிறதா? பாதிக்கப்பட்டவருக்கும், பாதிப்பு ஏற்படுத்தியவருக்கும், சி.எஸ்.ஆர்., பதிவின் அடிப்படையில் செய்யப்படும் சமரசத்தால் யாருக்கு லாபம்? எப்.ஐ.ஆருக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை, சி.எஸ்.ஆர்., பதிவுகளுக்கும் காவல் துறையினர் தருகின்றனரா?இதுபோன்ற, எண்ணற்ற கேள்விகள் எழும்புவதால், இப்பதிவுகளின் தொடர் நடவடிக்கைகளை, அரசு தீவிரமாக கண்காணிக்க வேண்டிய சூழல் எழுந்துள்ளது.


எதற்காக சி.எஸ்.ஆர்.,?


'பிடியாணை இன்றி கைது செய்யக்கூடிய குற்றங்கள் தவிர்த்து, மற்ற புகார்களை, சி.எஸ்.ஆரில் பதிவு செய்கிறோம். நீதிமன்றம், வழக்கு, வாய்தா, தீர்ப்பு என, இழுத்தடிக்காமல், காவல் நிலையத்திலேயே நியாயம் கிடைக்க, இந்த சி.எஸ்.ஆர்., உதவுகிறது. இதனால் தான், பதிவுகளின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது' என்கின்றனர் காவல் துறையினர்.மேலும், 'எப்.ஐ.ஆர்., பதிவு செய்வதன் மூலம், பாதிக்கப்பட்டவர், நியாயம் கிடைக்க, வழக்கு போட்டு காத்திருக்க வேண்டும். அதே போல், குற்றம் செய்தவர், தண்டனையை அனுபவித்தே தீர வேண்டும். இருபுறமும், வன்மம் இருந்து கொண்டே இருக்கும். இந்த வன்மம், மேலும் பல குற்றங்களுக்கு அடித்தளமாகி விடும். இதை தவிர்க்கவே, சி.எஸ்.ஆர்., பதிவுகளை அதிகப்படுத்துகிறோம். சம்பந்தப்பட்டவர்களை அழைத்து பேசி, பிரச்னையை சுமுகமாக தீர்க்கிறோம்' என்றும் அவர்கள் கூறுகின்றனர்.


சட்டத்தில் இடம் இல்லை

'சமூக ஒற்றுமை காக்கத்தான் சி.எஸ்.ஆர்.,' என, காவல் துறையினர் கூற, 'அவர்களின் கூற்றை ஏற்றுக் கொள்ள முடியாது' என்கிறார், ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சந்துரு. இதுகுறித்து அவர் கூறுகையில், 'சி.எஸ்.ஆர்., என்பது, தமிழகத்தில் மட்டும் அமலில் இருக்கும் ஒரு ஏற்பாடு. இதைப் பற்றி குற்றவியல் நடைமுறைச் சட்டத்திலோ, இந்திய தண்டனைச் சட்டத்திலோ எதுவும் கூறப்படவில்லை. ஒரு வழக்கு பதிவாவதை தள்ளிப் போடுவதற்கு, தமிழக காவல்துறை அமல்படுத்தியிருக்கும் ஏற்பாடு இது. இதோடு மட்டுமில்லாமல், குற்றப் புள்ளி விவரங்களை மறைப்பதற்கும், இந்த சி.எஸ்.ஆர்., பயன்படுத்தப்படுகிறது' என்றார்.


சி.எஸ்.ஆர்., மர்மம்!


சட்ட வல்லுனரின் கூற்று இப்படியிருக்க, சி.எஸ்.ஆர்., பதிவுக்கு, காவல் துறையினர் அதிக அளவில் முக்கியத்துவம் கொடுத்து வருகின்றனர். சமீபத்தில் கூட, 'புகார்களை முறையாக வாங்கி, சி.எஸ்.ஆர்., பதிய வேண்டும்' என, அனைத்து காவல் நிலையங்களுக்கும், சென்னை மாநகர காவல்துறை ஆணையர் உத்தரவிட்டிருந்தார். கூடவே, 'புகார்கள் பதிவில் பிரச்னை ஏதேனும் இருந்தால், பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம்' என, 044 -2561 5086 என்ற, பிரத்யேக தொலைபேசி எண்ணையும் அறிவித்திருந்தார்.இந்த எண், செயல்பாட்டுக்கு வந்த ஒரு வாரத்திற்குள், புகார்கள் குவிய, பத்துக்கும் மேற்பட்ட ஆய்வாளர்கள், ஆணையரால் கடுமையாக கண்டிக்கப்பட்டனர். 


இதுகுறித்து சமூக ஆர்வலர்களின் கருத்து: சி.எஸ்.ஆரில் பதியப்படும் புகார்களுக்கு, எப்.ஐ.ஆருக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம் கொடுக்கப்படுவது இல்லை. புகாரை காவல் நிலைய ஆய்வாளர் பெற்றுக் கொண்டார் என்பதற்கான ஒப்புதல் சீட்டே, சி.எஸ்.ஆர்., பதிவு! இதற்கு சட்டத்தில் எவ்வித அங்கீகாரமும் இல்லை.புகாரில், ஒருவரை கைது செய்யக்கூடியமுகாந்திரம் இருந்தால், உடனே, எப்.ஐ.ஆர்., போட்டு விடலாம். அப்படி இல்லாத பட்சத்தில், விசாரணை மேற்கொண்டு, அந்த விசாரணையில், குற்றம் உறுதியானால், எப்.ஐ.ஆர்., பதிவு அவசியம். ஆனால், காவல் துறையினர் இதை முறையாக பின்பற்றுவதில்லை. தற்போது இருக்கும் பிரச்னையே, சி.எஸ்.ஆர்., புகார்கள் முறையாக விசாரிக்கப்படுவதில்லை என்பது தான்! இதை, சென்னை காவல் ஆணையரின் சமீபத்திய நடவடிக்கைகள் உறுதிப்படுத்தி உள்ளன.இவ்வாறு அவர்கள் கூறுகின்றனர்.இதற்கு ஒரு உதாரணமும் உள்ளது.


1990ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட சி.எஸ்.ஆர்., மிக நல்ல திட்டம். ஆனால், அதை முறையாக செயல்படுத்தாத காரணத்தால், நீதிமன்றத்தின் விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறது' என்றார். 


முன்பெல்லாம், காவல் துறையினருக்கும், 

பொதுமக்களுக்கும் இடையே நட்பு இருந்தது. இந்த 

நட்பு, குற்றங்கள் நடக்காமல் தடுக்கவும், அப்படி நடந்தால், காவல் துறையினரின் பார்வைக்கு உடனடியாக கொண்டு செல்லவும் உதவியது. 


சி.எஸ்.ஆர்., வரமா?


'பேசித் தீர்ப்பதால், பிரச்னைகள் ஒழியும். அதற்கு எப்.ஐ.ஆர்., பதிவை விட, சி.எஸ்.ஆர்., தான் உதவும்' என்கிற வகையில் செயல்படுகிறது காவல் துறை. 'குற்றம் இழைத்தவன் தப்பிக்கத்தான் சி.எஸ்.ஆர்., பாதிக்கப்பட்டவனுக்கு நியாயம் கிடைக்க அல்ல!' என்கிறது சமூக ஆர்வலர்களின் குரல். 'சி.எஸ்.ஆர்., என்பது சட்டத்தில் இல்லாத ஒன்று; தகவல் அளிப்பவர்களைசமாளிக்க கொடுக்கப்படும் ஒப்புதல் சீட்டு' என்கிறது நீதித் துறை.'இந்நிலையில், 'எங்கள் நடவடிக்கை, சமூகத்துக்கு நல்லது. அதை சமூகம் ஏற்றுக் கொள்ள வேண்டும்' என, காவல் துறை கருதுமாயின், சி.எஸ்.ஆர்., பதிவுகளின் மீதுநிஜமான அக்கறை காட்டி, சமூகப் பிரச்னை களை உடனுக்குடன் தீர்க்க வேண்டும்' என்கின்றனர், சமூக ஆர்வலர்கள்.


எப்.ஐ.ஆர்., பிரச்னையா?


எப்.ஐ.ஆர்., என்பது, குற்றவியல் நடைமுறை சட்டத்தில், 154வது பிரிவாகும்.காவல்நிலைய அதிகாரி, எப்.ஐ.ஆர்., பதிவு செய்ய மறுத்தால், சம்பந்தப்பட்ட மாவட்ட கண்காணிப்பாளரிடம் முறையிடலாம். அவர், தானாகவோ (அ) குற்ற எல்லைக்குட்பட்ட காவல் நிலையத்திடமோ, அக்குற்றத்தை புலனாய்வு செய்ய உத்தரவிடலாம். இதற்கான அதிகாரம், குற்றவியல் நடைமுறை சட்டத்தின் 154(3) பிரிவில் கூறப்பட்டுள்ளது.காவல் துறை கண்காணிப்பாளரும், மேல்நடவடிக்கை எடுக்காதபோது, உயர் நீதிமன்றத்தின் முதன்மை அமர்வு (சென்னை) அல்லது மதுரை அமர்வில், குற்றவியல் நடைமுறைச் சட்டத்திலுள்ள சிறப்புப் பிரிவான 482ன் கீழ் மனு செய்து, சம்பந்தப்பட்ட காவல்நிலைய அதிகாரிக்கு வழக்கு பதிவு செய்ய உத்தரவிடக் கோரலாம்.இதுதவிர, சம்பந்தப்பட்ட குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில், அவ்வழக்கு பற்றி தனிநபர் புகாராக கொடுக்கலாம். குற்றவியல் நடுவர் புகாரை ஏற்றுக் கொண்டால், புலனாய்வு விசாரணை மேற்கொள்ள, தகுந்த காவல் துறை அதிகாரிக்கு, அவர் உத்தரவிடுவார்.


சமூகத்தில் இருக்கும் ஒவ்வொருவருக்கும், பாதுகாப்பு உணர்வும், நிச்சயத்தன்மையும் தேவைப்படுகின்றன. காவல் நிலையம் என்றால், அது நியாயம் தரும் இடமாக இருக்க வேண்டும். அப்போது தான், இந்த இரு எதிர்பார்ப்புகளும் பூர்த்தியாகும். இதை, சி.எஸ்.ஆர்., தரும் என்றால், நிம்மதி! இல்லையென்றால், காயப்பட்ட மனதில், அமைதியின்மை வந்துவிடும். அந்த அமைதியின்மை, வன்முறைக்குத்தான் வழிவகுக்கும்!' 


'குற்றங்கள் குறைய வேண்டுமென்றால், தண்டனைகள் கடுமையாக இருக்க வேண்டும். நம் நாட்டில் குற்றங்கள் பெருகி வர காரணமே, குற்றங்களுக்கு பொருத்தமான தண்டனைகள் இல்லாமல் இருப்பது தான்! பொதுவாக, எல்லாருக்குள்ளும் தவறு செய்யும் குணம் உண்டு. சி.எஸ்.ஆர்., அந்த குணத்தை தடுப்பதாக அமைய வேண்டுமே தவிர, அதை அனுமதிப்பதாக இருந்துவிடக் கூடாது!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறை அல்லது நிறை எதாவது சொல்லிட்டு போங்க பாஸ்