எந்தக் கிழமைகளில் என்ன செய்யலாம்
பொதுவாகவே எல்லா நாட்களிலும் எல்லோருக்கும் ஏதாவது ஒரு செயலைச் செய்யவேண்டிய அவசியம் நிச்சயம் இருக்கும் .
அதேசமயம் எந்த தினத்தில் எதைச் செய்யலாம் என்பதைத் தெரிந்துகொண்டு செயல்படுத்தினால் வெற்றிக்கான வாய்ப்புகள் அதிகரிக்கும் என்கின்றன ஜோதிட சாஸ்திரங்கள் !
எந்தக் கிழமை , என்ன செய்யலாம் ? இதோ ...
ஞாயிற்றுக்கிழமை : சுபகாரியத் தொடக்கம் , ஹோமங்கள் , யாத்திரை புறப்படுதல் , பதவி ஏற்றல் , சிகிச்சை மேற்கொள்ளல் , விதை விதைத்தல் கிரகப்ரவேசம் , வாகனங்கள் வாங்குதல் , சூரியன் அல்லது அனுமன் வழிபாடு செய்து தானமளித்தல் செய்யலாம் .
திங்கட்கிழமை : வர்த்தக ஆரம்பம் , திருமணம் , புராணங்கள் படித்தல் , தானிய சேமிப்பு , யாகங்கள் , கிணறு வெட்டுதல் , மாங்கல்யத்திற்குப் பொன் உருக்குதல் , கோயிலுக்குத் திருப்பணி தொடங்குதல் , சிவனை வணங்கி அன்னதானம் செய்தல் ஆகியன செய்யலாம் .
செவ்வாய்கிழமை : போருக்கான ஏற்பாடுகள் செய்தல் , நெருப்பு சார்ந்த பணிகளைத் தொடங்கிடல் , வாகனங்களுக்கு பூஜையிடல் , அஸ்திரவித்தைகள் பழகுதல் , முருகப்பெருமானை வணங்கி ஏழைகளின் திருமணத்துக்கு உதவிடல் ஆகியவை செய்யலாம் .
புதன் கிழமை : திருமாங்கல்யம் செய்தல் , ஹோமசாந்தி செய்தல் மருந்து உண்ண ஆரம்பித்தல் , நீதி , தர்மம் பரிபாலித்தல் , கல்வி , கலை கற்கத் தொடங்குதல் , புதிய வாகனத்தில் பயணம் செய்தல் , பெருமாளை வணங்கி ஆடை தானம் அளித்தல் செய்யலாம் .
வியாழக்கிழமை : கடவுள் படங்கள் , சிலைகள் வாங்குதல் , பிதிஷ்டை செய்தல் , சுபகாரியங்கள் செய்தல் , குழந்தைகளுக்கு பெயர் சூட்டல் , தியானம் பழகத் தொடங்கல் , போர்வெல் - கிணறு போடுதல் , வேதம் கற்றிடத் தொடங்குதல் , தட்சிணாமூர்த்தியை வணங்கி அன்னதானம் வழங்குதல் , அறிஞர்கள் உரை கேட்டல் , மகான்களை தரிசித்தல் ஆகியன செய்யலாம் .
வெள்ளிக்கிழமை : விவாகம் , சுமங்கலி பூஜைகள் , கிரகப்பிரவேசம் , குழந்தைகளுக்கு சோறு ஊட்டல் , தர்ம ஸ்தாபனங்கள் ஆரம்பித்தல் , குழந்தையைத் தொட்டிலில் இடுதல் , வளைகாப்பு நடத்துதல் , காதுகுத்துதல் , மகாலட்சுமியை வணங்கி மங்களப் பொருடகளை தானமளித்தல் ஆகியன செய்யலாம் .
சனிக்கிழமை : பருத்தி விதைத்தல் , இரும்பு சார்ந்த பணிகளைத் தொடங்குதல் , தீட்சை வாங்குதல் , வளர்ப்புப் பிராணிகள் வாங்குதல் , இயந்திரங்கள் தொடர்பான பணிகளைச் செய்தல் , சனிபகவானை ஆராதித்து மாற்றுத் திறனாளிகளுக்கு உதவுதல் ஆகியவற்றைச் செய்யலாம் .