நடிகர் விஜய் தமிழகத்தில் எக்கச்சக்க ரசிகர் கூட்டத்தை கொண்ட நடிகர்களில் ஒருவர். போழுதுபோக்கு என்று மட்டும் இல்லாமல் இவர் தற்பொழுது மக்களுக்கு தேவையான சமூக கருத்துக்களையும் தன் படங்களில் தெரிவித்து வருகிறார்.
அப்படி மக்களை வஞ்சிக்கும் அரசிற்கு எதிராக இடம்பெற்றிருந்த வசனத்தினால் பல்வேறு பிரச்சனைகளை சந்தித்த நடிகர் விஜயின் திரைப்படம் மெர்சல். என்றாலும் அந்த பிரச்சனை தடைக்கற்களை படிக்கல்லாக்கி வெற்றி நடைப்போட்டது.
அதிலும் குறிப்பாக அந்த திரைப்படத்தில் இடம் பெற்றிருந்த ஆளப் போறான் தமிழன் எனும் பாடலை தமிழர்கள் தலையில் வைத்து கொண்டாடினர். ஏ. ஆர். ரஹ்மானின் இசையில் பட்டி தொட்டி எங்கும் ஒலித்த அந்த தமிழருக்கான பாடல், தமிழ் புத்தாண்டான இன்று மாபெரும் சாதனை படைத்து தமிழர்களுக்கு மேலும் பெருமை சேர்த்துள்ளது.