நெல்லையப்பர் கோயிலில் நடிகர் தனுஷ் சுவாமி தரிசனம்

நெல்லையப்பர் கோயிலில் சினிமா நடிகர் தனுஷ் தனது சினிமா குழுவினருடன் சுவாமி தரிசனம் செய்தார். நடிகர் தனுஷ் தற்போது மாரி 2 சினிமா படத்தில் நடத்தி வருகிறார். இதற்கான படப்பிடிப்பு நெல்லை மாவட்டம் தென்காசி பகுதியில் நடந்து வருகிறது. இதில் நடிகர் தனுஷ், நடிகை சாய்பல்லவி, நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர் உட்பட பலர் நடித்து வருகின்றனர்.

இந்நிலையில் திடீரென நடிகர் தனுஷ், நடிகை சாய்பல்லவி தனது சினிமா படக்குழுவினருடன் நேற்று காலை நெல்லை டவுன் நெல்லையப்பர் கோயில் வந்தனர். அங்கு நெல்லையப்பர், காந்திமதியம்பாள் பள்ளி எழுச்சி சிறப்பு பூஜையில் கலந்து கொண்டனர். இதனையறிந்து அங்கு ஏராளமான அவரது ரசிகர்கள் திரண்டனர் பின்பு அவர் தனது குழுவினருடன் அங்கிருந்து தென்காசிக்கு புறப்பட்டு சென்றார்
Share on Google Plus

About உதயம் மலர்

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.