
புதுடெல்லி: இன்றைய சமூக ஊடக யுகத்தில் வாட்ஸ்அப் அனைவரும் எளிதாக அணுகும் ஒரு செயலியாக பிரபலமாக உள்ளது. ஆனால், இன்னும் 10 நாட்களில் சில போன்களில் வாட்ஸ்அப் வேலை செய்யாது.
ஆண்ட்ராய்டு ஓஎஸ் 4.1 மற்றும் அதற்கு மேல் ஆதரிக்கும் ஸ்மார்ட்போன் உள்ளவர்கள் மற்றும் ஐஓஎஸ் 10 மற்றும் அதற்கு மேல் உள்ளவர்கள் மட்டுமே வாட்ஸ்அப்பைப் பயன்படுத்த முடியும் என்பது அனைவரும் தெரிந்துக் கொள்ள வேண்டிய தகவல் ஆகும்.
பேஸ்புக்கிற்குச் சொந்தமான மெசேஜிங் செயலியான வாட்ஸ்அப் நவம்பர் 1 முதல், அதாவது இன்னும் 10 நாட்களில் பல ஸ்மார்ட்போன்களில் வேலை செய்வதை நிறுத்திவிடும் என்று அறிவித்துள்ளது.