100 நாள் வேலை திட்டம் ஊதியம் உயர்வு

 


100 நாள் வேலை திட்டத்தில் ஊதியம்  முதல் ரூ.281 ஆக உயர்த்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊராட்சித்துறை கொள்கை விளக்க குறிப்பில், மகாத்மா காந்தி தேசிய வேலை வாய்ப்பு உறுதி திட்டம் பிப்ரவரி 2006ல் இந்திய அரசால் தொடங்கப்பட்டது என்றும், இது ஒவ்வொரு நிதியாண்டிலும் ஊரக குடும்பங்களுக்கு 100 நாட்கள் வேலை வாய்ப்பை தரும் திட்டமாகும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், திறன் சாரா தொழிலாளர்களுக்கான ஊதியம் ஊரக விலை பட்டியலின் அடிப்படையில் நிர்ணயிக்கப்படுவதாகவும், ஒரு வயது வந்த நபர் ஒரு மணி நேரம் உணவு இடைவெளியுடன் கூடிய 8 மணி நேர வேலைக்கு பெறக்கூடியதற்கு சமமாக நிர்ணயிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், 2021-22-ம் ஆண்டிற்கான அறிவிக்கப்பட்ட ஊதியம் நாளொன்றிற்கு ரூ.273 ஆக நிர்ணயிக்கப்பட்டது என்றும், 2022-23ம் ஆண்டிற்கான அறிவிக்கப்பட்டதற்கான ஊதியம் ஆண்கள் மற்றும் பெண்கள் என்ற வேறுபாடின்றி தமிழ்நாட்டிற்கு 100 நாள் வேலை -க்கு நாள் ஒன்றுக்கு ரூ.281 என்று திருத்தி அமைக்கப்படுவதாக ஊராட்சித்துறை கொள்கை விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, ஊரக வேலை உறுதித் திட்டத்தில் பணியாளா்களுக்கான ஊதியத் தொகையில் மத்திய அரசானது 75%, மாநில அரசு 25% பகிா்ந்து கொள்கின்றன. அதன்படி, ரூ.674 கோடியே 84 லட்சத்து 82 ஆயிரத்தை மத்திய அரசு ஏற்கனவே விடுத்திருந்தது. 25% தொகையான ரூ.224 கோடியே 94 லட்சத்து 94 ஆயிரத்தை மாநில அரசு விடுத்திருக்கிறது. நிா்வாகச் செலவுகளுக்காக ரூ.49 கோடியே 32 லட்சத்து 18 ஆயிரம் ஒதுக்கப்பட்ட நிலையில், மொத்தமாக மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதித் திட்டத்துக்காக ரூ.949 கோடியே 11 லட்சத்து 94 ஆயிரம் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துரையிடுக

குறை அல்லது நிறை எதாவது சொல்லிட்டு போங்க பாஸ்

புதியது பழையவை