Recent Posts

Labels

உதயம் மலர்

உதயம் மலர்

Contact form

Search This Blog

3/related/default
Developed by ❤️ - Blogger Templates at Piki Templates | Distributed by Free Blogger Templates

Made with Love by

Monster Template is Designed Theme for Giving Enhanced look Various Features are available Which is designed in User friendly to handle by Piki Developers. Simple and elegant themes for making it more comfortable

உதயத்தூர் முத்தாரம்மன் கோவிலில் தீண்டாமையா..?

25 அக்., 2022

இராதாபுரம்:இராதாபுரம் தாலுகா உதயத்தூர் ஊராட்சியில் அமைந்துள்ள இக்கோயில் சித்திரை மாதம் திருவிழா கோலாகலமாக நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது இக்கோவிலில் தலித் மக்கள் உள்ளே செல்ல அனுமதி இல்லை என்று கேள்விப்பட்டு அப்பகுதியில் உள்ள தலித் மக்களிடம் கேட்டறிந்தோம் அதில் சிலர் நாங்களாகத்தான் உள்ளே செல்ல மாட்டோம் என்று கூறினர் சிலர் அந்தக் காலத்தில் இருந்ததே இதுபோல் தீண்டாமை நடந்து கொண்டிருக்கிறது. கடவுள் குத்தம் ஆகிவிடும்.
இதைப்பற்றி அவ் ஊரில் உள்ள ஒருவரிடம் விசாரித்த போது அவர் கூறினார்.
தலித் மக்கள் உள்ளே செல்ல அனுமதி இல்லை என்பது உண்மைதான் என்றார்.

உதயத்தூர் ஊராட்சியில் சித்திரை மாதம் முத்தாரம்மன் கோவில் கொடைவிழா வந்து விட்டாலே போதும் ஒரே கொண்டாட்டம் தான்
உதயத்தூர் முத்தாரம்மன் கொடைவிழா முடியும் வரை இங்கு எந்த ஊர் கோவிலுக்கும் கொடைவிழா கிடையாது.


உதயத்தூர் அம்மன் கோவில் கொடைவிழா முடிஞ்சி அடுத்த செவ்வாய் வேணும்னா வச்சிருலாம் என்பார்கள் எங்க ஊர் பெரியவர்கள்  அந்த கோவில் மீது அவ்வளவு பக்தி எங்க ஊர் பெரியவர்களுக்கு.


சித்திரை திருவிழா என்றாலே ஊரே கோலாகலமாக இருக்கும் சென்னை, கோவை மதுரை, மும்பை எங்கு வேலை பார்த்தாலும் சரி இந்த திருவிழாவுக்கு கண்டிப்பாக ஊருக்கு வந்திடுவோம்.
வறுமை வாட்டினாலும் வட்டிக்கு காசு வாங்கியாவது புது துணி வாங்கி கொடுப்பாங்க வீட்டுல 
அதை வாங்கி போட்டுக்கொண்டு சுமார் ஒரு கிலோ மீட்டர் நடந்தே செல்வோம்.

கோவிலுக்கு போகும் போது அவ்வளவு சந்தோசமா இருக்கும் மனசுல.

அப்பா கூறுவார் அந்த கோவிலுக்கு நாம வெறகு வெட்டி குடுத்தாதான் சமயலே ஆகும்ல என்று பெருமையாக.

ஊருல உள்ள எல்லோரும் ஆளுக்கு ஒரு கட்டு விறகு வெட்டி ஊர்ல முக்குசந்தியில எல்லோரும் வச்சிட்டு நிப்போம் ஊர்ல உள்ள எல்லோரும் வந்ததும் ஆளுக்கு ஒரு கட்டு விறக தலையில சுமந்துகிட்டு அனைவரும் கோவில நோக்கி நடப்போம்.

இதுவே தலைமுறை தலைமுறையாக நடந்து கொண்டு இருந்தது.

கோவிலுக்கு சென்று நிகழ்ச்சி பார்ப்பதும் அங்கு உள்ள கடைகளில பொருட்கள் வாங்குவதும் இப்படியே ஒவ்வொரு திருவிழாக்களும் கழிந்தன.

நாங்கள் சிறுவயதில் புதுத்துணி அணிந்து கொண்டு கோவிலுக்கு செல்லும்போது எங்களைப் பார்த்து சில நபர்கள் உங்களைத்தான் கோவில் உள்ளேயே விடுவதில்லையே உங்களுக்கு எதற்கு புதுத்துணி என்று கேட்டோம் 

சுய சிந்தனை வர ஆரம்பித்தது திருவிழாவுக்கு வருகிறோம் கடைகளில் பொருட்கள் வாங்குகிறோம் நிகழ்ச்சி பார்க்க வீட்டுக்கு கிளம்பி செல்கிறோம் நாம் வருகிறதே கோவிலுக்கு தான் ஆனால் கோவிலுக்கு உள்ளே செல்லவில்லையே என்று மனதுக்கு ஒரு நாள் தோன்றியது.

அதற்குப் பிறகு நம்மை உள்ளே செல்ல அனுமதிக்காத கோயிலுக்கு நாம் ஏன் செல்ல வேண்டும் என்ற எண்ணம் மனதில் தோன்றியது.

ஊர் பெரியவர்களிடம்  கேள்வி கேட்டோம் நம்மை உள்ளே செல்ல அனுமதிக்காத கோயிலுக்கு நாம் ஏன் செல்ல வேண்டும் என்று.
அதன்பிறகு கொஞ்சம் மக்கள் கோவிலுக்கு செல்வத்தை நிறுத்தினர்.
ஊர் பெரியவர்கள் பேச்சில் ஒன்று மட்டும் புரிந்தது அவர்கள் நம்மை அடிமையாக வைத்திருப்பது கூட தெரியாமலேயே நாம் அடிமையாக இருப்பதுதான்.
கோவிலுக்கு சென்றால் கோவில் கேட்டு பூட்டப்பட்டு அங்கேயே வாசலிலேயே ஒருவர் உண்டியலுடன் நிப்பார் நாம் உண்டியலில் பணம் போட்டதும் திருநீர் தருவார் 

அப்போது நான் யோசித்தேன் தலித் மக்கள் கோவில் உள்ளே செல்ல அனுமதி இல்லை ஆனால் அவர்கள் தரும் காணிக்கை கடவுளுக்கு அபிஷேகம் செய்ய தலித் மக்கள் கொடுக்கும் பணத்தில் தீட்டு இல்லை போல.
கோவிலுக்கு மேளம் அடிப்பவர்களை கூட தலித் என்பதால் கோயிலுக்கு வெளியே நிறுத்தி வைத்தனர்.
நடந்த கொடுமைகளை இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்
இதை விட கேவலம் என்றால் தலித் மக்களை அனுமதிக்காத கோவிலில் திருவிழா முடிந்தது அங்கே மிச்சம் மீதி இருக்குற சோறு, பழம் ,தேங்காய் எல்லாவற்றையும் ஊருக்கு கொடுத்து விடுவதுதான் அதை இங்கே வரிப்பழம் போல பங்கு வைப்பதுதான் கொடுமை.

காலங்கள் மாற மாற சுயஅறிவு கொண்டு சிந்தித்து கொண்டவர்கள் கொடைவிழா நேரத்தில் புது துணி எடுப்பதையும் #விறகு வெட்டி செல்வதையும் திருவிழா நேரங்களில் ஊருக்கு வருவதையும் நிறுத்திக் கொள்கிறோம்.




இதையெல்லாம் பார்த்து அமைதியாக இருக்க அந்த அம்மனுக்கு சக்தி இருக்கோ இல்லையோ எங்களுக்கு சக்தி இல்லை.

இதை விட இன்னும் மூட நம்பிக்கை என்ற பெயரில் நடந்த கொடுமைகளை சொல்லிக்கிட்டே இருக்கலாம் நிறைய இருக்கு சொல்லி என்ன புண்ணியம் என்றார்.

தீண்டாமை ஒரு பாவ செயல்
தீண்டாமை ஒரு பெருங்குற்றம்
தீண்டாமை ஒரு மனிதத்தன்மையற்ற செயல் 

புத்தகத்தில் படித்தால் மட்டும் போதாது இந்த நாகரீக காலத்தில் இப்படி தீண்டாமையை கடைப்பிடித்து வருபவர்களே அனைவரும் சமம் என ஒரு நாள் உணர்வார்கள் இந்த கோவிலுக்கு அனைத்து சமுதாய மக்களும் செல்ல வேண்டும் என்று கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறை அல்லது நிறை எதாவது சொல்லிட்டு போங்க பாஸ்