Recent Posts

Labels

உதயம் மலர்

உதயம் மலர்

Contact form

Search This Blog

3/related/default
Developed by ❤️ - Blogger Templates at Piki Templates | Distributed by Free Blogger Templates

Made with Love by

Monster Template is Designed Theme for Giving Enhanced look Various Features are available Which is designed in User friendly to handle by Piki Developers. Simple and elegant themes for making it more comfortable

மகளிர் சுய உதவிக் குழுவினருக்கு வெப்சைட்.. பொருட்களை விற்பனை செய்ய ஏற்பாடு!

24 டிச., 2022
இந்தியாவில் சுய உதவிக் குழுக்களின் இருப்பு வறுமைக் கோட்டுக்குக் கீழே உள்ள மக்களைத் திறன் மற்றும் தன்னம்பிக்கை கொண்டவர்களாக மாற்றுவதற்கு மிகவும் பொருத்தமானது. இந்தியாவில் உள்ள சுய உதவி குழுக்கள் அவர்களின் வருமானத்தை அதிகரிக்கவும், அவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தவும், சமூகத்தில் அவர்களின் நிலையை மேம்படுத்தவும் உதவுகின்றன.
சுய உதவிக் குழுக்களில், கூட்டு நடவடிக்கையின் மூலம் அவர்கள் அதிகாரமளிக்கப்படுவது உறுதி. இந்தியாவில் சுய உதவிக் குழுக்கள் தொடர்பான இந்தத் திட்டம் ஏழை கிராமப்புற மக்களை குறிப்பாக பெண்களைத் திரட்டி பரஸ்பர நலன்களுக்காக சுய உதவி குழுக்களை உருவாக்குகிறது. இந்தியாவில் உள்ள சுய உதவிக் குழுக்கள் சேமிப்பு மற்றும் கடனை மேம்படுத்துவதிலும், வறுமை மற்றும் சமூக ஏற்றத்தாழ்வுகளைக் குறைப்பதிலும் முக்கியப் பங்காற்றுகின்றன.

ஊரகப் பகுதிகளில் வசிக்கும் ஏழைப் பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவது மற்றும் அவர்கள் தயாரிக்கும் பொருட்களுக்கு லாபகரமான சந்தையை ஏற்படுத்தி, அவர்களது வருமானத்தை உயர்த்தும் நோக்கத்தோடு மத்திய ஊரக மேம்பாட்டு அமைச்சகம் பணியாற்றி வருகிறது. இத்தகைய பெண்கள் தங்களது பொருட்களை சந்தைப்படுத்துவதற்காக உள்ள வாய்ப்புகளும் மிகக் குறைவுதான்.

அதேபோல தேசிய ஊரக வாழ்வாதார இயக்கம், மாநில ஊரக வாழ்வாதார இயக்கங்களால் அமைக்கப்பட்ட நேரடி கடைகளில் மட்டுமே பெண்கள் தங்களுடைய பொருட்களை விற்பனை செய்யும் நிலை இருந்தது. இந்நிலையில் சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்த உறுப்பினர்களின் பொருட்களை சந்தைப்படுத்துவதற்கான மின்னணு வர்த்தக தளம் பற்றி 2022 ஆகஸ்ட் 15ஆம் தேதியன்று செங்கோட்டை கொத்தளத்தில் பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார்.

இந்த அறிவிப்பின் படி, நாடு முழுவதும் உள்ள மகளிர் சுய உதவி குழுக்களின் பொருட்களை சந்தைப்படுத்துவதற்காக http://www.esams.in என்ற பிரத்யேக தளத்தை ஊரக மேம்பாட்டு அமைச்சகம் கடந்த அக்டோபர் மாதம் 28ஆம் தேதி அறிமுகப்படுத்தியது. ஊரகப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு லாபகரமான சந்தை வாய்ப்பை இந்த தளம் வழங்குவதோடு, பாரம்பரிய மற்றும் இயற்கைப் பொருட்களை விரும்பும் மக்களின் தேவையையும் பூர்த்தி செய்யும்.
பிரதமர் நரேந்திர மோடியின் அறிவிப்பைத் தொடர்ந்து அனைத்து மாநில ஊரக வாழ்வாதார இயக்கங்களும் தங்களுக்கு வேண்டிய பொருட்களை இந்த தளத்தின் மூலம் வாங்க உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த மின்னணு வர்த்தக சந்தை தளம் பற்றி மக்களிடையே அதிகளவில் விழிப்புணர்வை ஏற்படுத்துமாறு மத்திய அரசின் அமைச்சகங்களும், துறைகளும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன.

ஊரக மேம்பாட்டு அமைச்சகத்தின் ஊழியர்கள் ஒவ்வொருவரும் குறைந்தபட்சம் ஒரு பொருளை இந்த தளத்தின் வாயிலாக வாங்க வேண்டும் என்று அமைச்சகம் ஆணையிட்டுள்ளது. அரசு முகமைகளும், ஊழியர்களும் முடிந்தவரையில் இந்த விற்பனை தளத்தை பயன்படுத்திக் கொள்ளுமாறு அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறை அல்லது நிறை எதாவது சொல்லிட்டு போங்க பாஸ்