Recent Posts

Labels

உதயம் மலர்

உதயம் மலர்

Contact form

Search This Blog

3/related/default
Developed by ❤️ - Blogger Templates at Piki Templates | Distributed by Free Blogger Templates

Made with Love by

Monster Template is Designed Theme for Giving Enhanced look Various Features are available Which is designed in User friendly to handle by Piki Developers. Simple and elegant themes for making it more comfortable

100 நாள் வேலைத் திட்டத்தில் இவ்வளவு செலவா? தமிழக அரசு ஆய்வு!

24 டிச., 2022
தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையின் கீழ் ஏழை எளிய மக்களின் முன்னேற்றத்திற்காக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்கம், வாழ்ந்து காட்டுவோம் திட்டம் மற்றும் தீனதயாள் உபாத்தியாய கிராமின் கௌசல்ய யோஜனா உள்ளிட்ட திட்டங்கள் சிறப்பாகச் செயல்பட்டு வருகின்றன.
இத்திட்டங்களின் செயல்பாடுகள் மற்றும் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து தமிழக ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கேஆர். பெரியகருப்பன் மற்றும்
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அரசு முதன்மைச் செயலாளர் பெ. அமுதா, ஆகியோர்
ஆய்வு மேற்கொண்டனர். சென்னை சைதாப்பேட்டை பனகல் மாளிகை ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அலுவலகக் கூட்ட அரங்கில் இன்று இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இந்த ஆய்வில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் 2022-23ஆம் ஆண்டிற்கு ஊதிய செலவினமாக ரூ.4783.48 கோடியும், பொருட்கூறு மற்றும் நிர்வாக செலவினமாக ரூ.2360.44 கோடியுமாக மொத்தம் ரூ.7143.92 கோடி செலவினம் மேற்கொள்ளப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. அதேபோல, நடப்பாண்டில் 2.77 லட்சம் பணிகள் எடுக்கப்பட்டு அதில் 1.08 லட்சம் பணிகளும் 2.72 லட்சம் நிலுவை பணிகளுமாக சேர்த்து மொத்தம் 3.80 லட்சம் பணிகள் இதுவரை முடிக்கப்பட்டுள்ளன.

நிலுவையிலுள்ள பணிகள் அனைத்தும் இந்த நிதியாண்டிற்குள் செய்து முடிக்கப்படும் என்று அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது. மேலும், தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் கீழ் செயல்படும் சுய உதவிக் குழுக்களின் செயல்பாடுகள் மற்றும் வளர்ச்சிக்கான நடவடிக்கைகள் குறித்தும், அடைய வேண்டிய இலக்குகள் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது.
இந்த ஆய்வுக் கூட்டத்தில் ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் பேசுகையில், “அதிக எண்ணிக்கையில் மகளிர் சுய உதவிக் குழுக்களை உருவாக்கி, அரசின் திட்டங்கள் முழுவதும் சுய உதவிக் குழுக்களை சென்றடையும் வண்ணம் செயல்பட வேண்டும். சுய உதவிக் குழுக்களுக்கு வங்கிக் கடன் இணைப்பாக ரூ.25,000 கோடி வழங்கப்பட நிர்ணயிக்கப்பட்ட இலக்கினை விரைந்து அடைந்திட வேண்டும். தர மதிப்பீடு செய்யப்பட்ட சுய உதவிக் குழுக்களுக்கு சுழல் நிதிகளை வழங்கிட மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் மற்றும் சமுதாய முதலீட்டு நிதி, இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு பெற்றுத் தரும் நடவடிக்கைகளில் அடைந்துள்ள இலக்குகளை விரைந்து அடைந்திட வேண்டும்“ என்று அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை ஆணையர் தாரேஷ் அகமது, தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் ச.திவ்யதர்சினி, வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் முதன்மை செயலாக்க அலுவலர் எம்.அருணா, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை கூடுதல் இயக்குநர் (பொது) மணீஸ் நாரணவரே மற்றும் கூடுதல் இயக்குநர்கள், இணை இயக்குநர்கள், அனைத்து மாவட்ட திட்ட இயக்குநர்கள், அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறை அல்லது நிறை எதாவது சொல்லிட்டு போங்க பாஸ்