பள்ளிவாசல்களில் பெண்களை அனுமதிக்க கோரிய மனு தள்ளுபடி


திருவனந்தபுரம்: கேரளாவில் பள்ளிவாசல்களில் பெண்களை அனுமதிக்கவேண்டும் என்று கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை அம்மாநில உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. சபரிமலையில் இளம் பெண்களையும் அனுமதிக்கவேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதற்கு கேரளாவில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதற்கு எதிராக கேரளா மற்றும் தென் மாநிலங்களில் தொடர் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், கேரளாவில் உள்ள பள்ளிவாசல்களில் பெண்களையும் அனுமதிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கோரி இந்து மகாசபை சார்பில் கேரள உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு தலைமை நீதிபதி ரிஷிகேஷ் ராய் தலைமையிலான டிவிஷன் பெஞ்ச் முன் நேற்று விசாரணைக்கு வந்தது

கருத்துரையிடுக

குறை அல்லது நிறை எதாவது சொல்லிட்டு போங்க பாஸ்

புதியது பழையவை