டிக்டாக் செயலி உலகம் முழுவதும் அதிகளவு மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். குறிப்பாக சீனாவின் முன்னணி நிறுவனமான பைட்டான்ஸ் (Bytedance) நிறுவனத்தின் டிக்டாக் செயலி ஆனது அதிகளவு பதிவிறக்கங்களை பெற்றுள்ளது,மேலும் இந்தியாவிலும் பிரபலமான செயலிகளுள் முக்கியமானது.
எனவே தற்போதைய சூழலில் சீனாவுக்கு எதிரான மனநிலை உருவாகியிருப்பதால், டிக்டாக் செயலிக்கு எதிரான குரல் தற்போதும் ஒலிக்கத் தொடங்கியிருக்கிறது. குறிப்பாக இந்த செயலி மூலம் திறமைகளை வெளிப்படுத்தி நாமே ஒரு நிமிடத்திற்கான வீடியோக்களை உருவாக்கலாம். அதற்குதகுந்த இசை மற்றும் ஒலிகளையும் சேர்க்கலாம். இது பட்டிதொட்டி எங்கும் வைரலானது என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஏப்ரல் மாதம் வரை டிக்டாக் செயலிக்கு 2பில்லியனுக்கும் மேற்பட்ட மக்களால் டவுன்லோடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் டிக்டாக் செயலிக்கு போட்டியாக புதிய திட்டத்துடன் இந்தியாவின் மிகப்பெரிய பொழுதுபோக்கு நிறுவனமான Zee களமிறங்க உள்ளது.
வெளிவந்த அறிவிப்பின் அடிப்படையில் ஜீ நிறுவனத்தின் Zee5 செயலின் அங்கமாக ஜூலை முதல் வாரத்தில் இது வெளியிடப்படும் என
எதிர்பார்க்கப்படுகிறது. முழுவதும் இந்திய பயனாளர்களைக் குறிவைத்து பல்வேறு புதிய அம்சங்களுடன் உருவாக்கப்பட்டுள்ளதாகத்
தகவல் வெளிவந்துள்ளது.
ஜீ நிறுவனம் அறிமுகம் செய்யும் புதிய செயலி பீட்டா வெர்ஷன் வெளியாகியிருப்பதாகவும் அதன்மூலம் பயன்படுத்துதலில் இருக்கும் சின்னக் சின்ன குறைபாடுகளை அடையாளம் காணும் இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.
மேலும் ஜி நிறுவனம் அறிமுகம் செயலி ஆனது Zee5 ஓ.டி.டி தளத்துடன் இணைந்து செயல்படும் என்கிறார்கள். இதற்கு `HiPi' என்று பெயரிடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
குறிப்பாக டிக்டாக் செயலிக்கு போட்டியாக வெளிவரும் இந்த செயலி கண்டிப்பாக இரண்டு வாரங்களிலேயே மக்களிடம் அதிக வரவேற்பைப் பெறும் என்று தயாரிப்பு நிறுவனம் தரப்பில் எதிர்பார்க்கப்படுகிறது.