சமயபுரத்தாளே மாரியம்மா பாடல் வரிகள்

ஆயி மகமாயி ஆயிரங்கண்ணுடையாள்
நீலி திரி சூளி நீங்காத பொட்டுடையாள்
சமயபுரத்தாளே சாம் ராணி வாசகியே
சமய புரத்தைவிட்டு சபைதனிலே வாருமம்மா
 சமயபுரத்தாளே மாரியம்மா – அம்மா
 சங்கரியே எங்கள் முன்னே வாருமம்மா
மல்லிகைச் சரம்தொடுத்து மாலையிட்டோம் – அரிசி
மாவிளக்கு ஏற்றிவைத்து பொங்கலும் வைத்தோம்
துள்ளியே எங்கள் முன்னே வாருமம்மா – அம்மா
தூயவளே என் தாயே மாரியம்மா
                                                 - சமயபுர
பட்டுப் பீதாம்பரத்தில் தாவணியும் – உனக்கு
பாவாடை சேலைகளும் கொண்டு வந்தோம்
எட்டுத் திசைகளையும் ஆள்பவளே – அம்மா
ஈஸ்வரியே என் தாயே மாரியம்மா
                                                 - சமயபுர
கத்திக் கதறுகிறோம் கேட்கலையோ – தாயே
கல்லோ தான் உன் மனமும் கரையலையோ
உலகமெல்லாம் ஆடுதம்மா உன் சிரிப்பிலே – எங்கள்
உமையவளே என் தாயே மாரியம்மா
                                                - சமயபுர
காலில் சலங்கையொலி காதைத் துளைக்குதம்மா
பாவாடை தாவணியும் தானாக ஆடுதம்மா
பூவாடை வீசுதம்மா பூமகளே – உனக்கு
பாமாலை கொண்டு வந்தோம் பாரம்மா
                                                 - சமயபுர

கருத்துரையிடுக

குறை அல்லது நிறை எதாவது சொல்லிட்டு போங்க பாஸ்

புதியது பழையவை