Recent Posts

Labels

உதயம் மலர்

உதயம் மலர்

Contact form

Search This Blog

3/related/default
Developed by ❤️ - Blogger Templates at Piki Templates | Distributed by Free Blogger Templates

Made with Love by

Monster Template is Designed Theme for Giving Enhanced look Various Features are available Which is designed in User friendly to handle by Piki Developers. Simple and elegant themes for making it more comfortable

சுவையன சமையல்

1 பிப்., 2014
சி எலுமிச்சை அவல் ரெசிபிரெ
  1. அவல் கொண்டு நிறைய ரெசிபிக்கள் செய்யலாம் . அதில் ஒன்று தான் எலுமிச்சை அவல் ரெசிபி . இது மிகவும் ஈஸியான , ​​அதே சமயம் ஆரோக்கியமான காலை உணவும் கூட . மேலும் இதனை குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள் . அதுமட்டுமல்லாமல் , பேச்சுலர்கள் கூட இதனை முயற்சிக்கலாம் . சரி , இப்போது அந்த எலுமிச்சை அவல் ரெசிபியை எப்படி செய்வதென்று பார்ப்போமா ! தேவையான பொருட்கள் : அவல் - 3 கப் எலுமிச்சை - 2 ( சாறு எடுத்துக் கொள்ளவும் ) கடுகு - 1 டீஸ்பூன் பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை பச்சை மிளகாய் - 2 ( நீளமாக கீறியது ) வெங்காயம் - 2 ( நறுக்கியது ) உருளைக்கிழங்கு - 1 ( வேக வைத்து நறுக்கியது ) வேர்க்கடலை - 1 கப் மஞ்சள் தூள் - 1 சிட்டிகை கறிவேப்பிலை - சிறிது கொத்தமல்லி - சிறிது உப்பு - தேவையான அளவு எண்ணெய் - தேவையான அளவு செய்முறை : முதலில் அவலை நீரில் 10 நிமிடம் அவல் மென்மையாகும் வரை ஊற வைத்துக் கொள்ள வேண்டும் . பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து , அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் , கடுகு , பெருங்காயத் தூள் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும் . பின்பு அதில் நறுக்கி வைத்துள்ள வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து சிறிது நேரம் வதக்க வேண்டும் . பின் உருளைக்கிழங்கை போட்டு , மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும் . அடுத்து , வேர்க்கடலை சேர்த்து நன்கு கிளறி விட்டு , இறுதியில் அவலை போட்டு , தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு 10 நிமிடம் கிளறி இறக்கி , எலுமிச்சை சாற்றினை ஊற்றி பிரட்டி , மேலே கொத்தமல்லியை தூவினால் , சுவையான எலுமிச்சை அவல் ரெசிபி ரெடி
  2.  
மட்டன் பிரியானி


தேவையான பொருட்கள் ; -
அரிசி - 1 கிலோ
மட்டன் - 1 கிலோ
இஞ்சி - 100 கிராம்
பூண்டு - 100 கிராம்
தக்காளி - 1 / 4 கிலோ
வொங்காயம் - 1 / 4 கிலோ
பச்சைமிளகாய் - 10
பட்டை - 10
லவங்கம் - 10
ஏலக்காய் - 10
மிளகாய் தூள் - 1 1 / 2 ஸ்பூன்
மல்லித்தூள் - 2 ஸ்பூன்
தயிர் - 250 கிராம்
எலும்மிச்சை - 1
புதினா - 1 / 2 கட்டு
கொத்தமல்லி - 1 / 2 கட்டு
எண்ணெய் - 50 கிராம் ( தேவைக்கு )
நெய் - 50 கிராம் ( தேவைக்கு )
உப்பு - தேவைக்கு
கேசரிப்பவுடர் - தேவைக்கு
அரைக்க வேண்டியவை ; -
இஞ்சி , பூண்டு இரண்டையும் நன்கு அரைக்கவும் .

பட்டை - 5 , லவங்கம் - 5 , ஏலக்காய் - 5 , மிளகாய்த்தூள் , மல்லித்தூள் இவை அனைத்தையும் ஒன்றாக சேர்த்து நன்கு அரைத்துக்கொள்ளவும்

செய்முறை ; -
ஒரு பாத்திரத்தில் எண்ணெய் , நெய் இரண்டையும் ஊற்றி நன்கு காய்ந்ததும் பட்டை -5 , லவங்கம் -5 , ஏலக்காய் -5 போட்டு அத்துடன் இஞ்சி , பூண்டு விழுதையும் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை நன்கு வதக்கவும் .

அதனுடன் கறி சேர்த்து நன்கு கிளறி அத்துடன் கறிக்கு தேவையான உப்பையும் போட்டு கிளறவும் . 5 நிமிடம் கழித்து அரைத்து வைத்த மசாலாப்பவுடரையும் சேர்த்து கிளறி , வெங்காயம் , பச்சைமிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும் .

அத்துடன் தக்காளி , புதினா , கொத்தமல்லி , சேர்த்து கிளறி . பிறகு தயிரையும் சேர்த்து நன்கு கிளறி சிறிது தண்ணீர் விட்டு வேக விடவும் .

முக்கால் பாகம் வெந்ததும் சாதத்திற்கு தேவையான தண்ணீர் ஊற்றி அத்துடன் உப்பு , கேசரி பவுடர் , எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு கிளறி விட்டு ஒரு கொதி வந்ததும் அரிசியை போட்டு கிளறி விடவும் .

5 நிமிடம் கழித்து நன்கு கிளறி அரை வேக்காடு வெந்து தண்ணிர் வற்றியதும் ஒரு மூடி போட்டு அதன் மேல் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி வைக்கவும் . ( தம் விடவும் ) இப்படி செய்யும் போது அடுப்பை குறைத்து வைக்க வேண்டும் .

கால் மணி நேரம் கழித்து எடுத்தால் சுவையான மட்டன் பிரியாணி தயார்





கேரட் பீன்ஸ் சூப்



குளிர்காலத்தின் மாலை வேளையில் சூப் குடித்தால் , குளிருக்கு இதமாக இருக்கும் . ஆனால் அந்த சூப்பில் நிறைய வெரைட்டிகள் உள்ளன . அதில் ஒன்று தான் கேரட் பீன்ஸ் சூப் . இந்த சூப் செய்வது மிகவும் ஈஸி மட்டுமின்றி , அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் இருக்கும் . மேலும் பேச்சுலர்கள் கூட மாலை வேளையில் இதனை முயற்சிக்கலாம் . சரி , இப்போது அந்த கேரட் பீன்ஸ் சூப் ரெசிபியை எப்படி செய்வதென்று பார்ப்போமா !





தேவையான பொருட்கள் : சோள மாவு - 2 டேபிள் ஸ்பூன் வெண்ணெய் - 1 / 2 டீஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 / 2 டீஸ்பூன் கேரட் - 1 ( பொடியாக நறுக்கியது ) பீன்ஸ் - 3 ( பொடியாக நறுக்கியது ) உப்பு - தேவையான அளவு தண்ணீர் - தேவையான அளவு செய்முறை : முதலில் ஒரு பாத்திரத்தில் 1 1 / 2 டேபிள் ஸ்பூன் சோள மாவை போட்டு , அதில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி , நன்கு கலந்து கொள்ள வேண்டும் . பின்பு ஒரு அகன்ற பாத்திரத்தை அடுப்பில் வைத்து , அதில் தண்ணீர் ஊற்றி , நறுக்கிய வைத்துள்ள காய்கறிகளை போட்டு , சிறிது உப்பு சேர்த்து , காய்கறிகளை வேக வைத்து , நீரை வடித்துவிட்டு காய்கறிகளை தனியாக வைத்துக் கொள்ள வேண்டும் . பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து அதில் வெண்ணெய் போட்டு உருகியதும் , 1 / 2 டேபிள் ஸ்பூன் சோள மாவு சேர்த்து கட்டி சேராதவாறு நன்கு கிளறி , பின் அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து கிளறி விட வேண்டும் . பிறகு அதில் நீரில் கரைத்து வைத்துள்ள சோள மாவு கலவையை ஊற்றி கிளறி , வேக வைத்துள்ள காய்கறிகளை சேர்த்து , தேவையான அளவு உப்பு சேர்த்து , கலவையானது சற்று கெட்டியாகும் வரை கொதிக்க விட்டு இறக்கினால் , சுவையான கேரட் பீன்ஸ் சூப் ரெடி ! குறிப்பு : இதன் மேல் கொத்தமல்லி , மிளகு தூள் மற்றும் கார்ன் சிப்ஸ் சேர்த்து சாப்பிட்டால் , கேரட் பீன்ஸ் சூப்பானது இன்னும் ருசியாக இருக்கும் .












கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறை அல்லது நிறை எதாவது சொல்லிட்டு போங்க பாஸ்