மகளிர் சுய உதவிக் குழுக்களை கண்காணிக்கும் முறையை தெரிந்துக்கொள்வோம்...!


பொதுக் குழுவில் நிறைவேற்றப்பட்டுள்ள முடிவுகளைக் கண்காணித்தல்

1. பொதுக் குழுவில் எடுக்கப்பட்ட முடிவுகள் முறையாக தீர்மானப் புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளதை உறுதி செய்தல்.

2. கூட்டத்தில் எடுக்கப்பட்ட இறுதி முடிவுகளின் அடிப்படையில் கையொப்பம் பெறப்பட்டுள்ளதை கவனித்தல்.

3. சமூக தணிக்கைக் குழுவின் விவாத பொருள் / அறிக்கை உரிய ஆதாங்களுடன் சமர்ப்பிக்கப்பட்டுள்ளனவா என சரிபார்த்தல்.

4. பொதுக் குழுக் கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகளுக்கு பெரும்பான்மையான அளவிற்கு ஒப்புதல் கிடைத்துள்ளதா என சரிபார்த்தல்.

5. விவாதப் பொருள் அனைத்தும் கூட்டத்தின் கலந்துரையாடலுக்கு கொண்டு வரப்பட்டுள்ளனவா என சரிபார்த்தல்.

6. துணைக் குழுக் கூட்டங்களில் எடுக்கப்படும் முடிவுகளைக் கண்காணித்தல். 

குழுஅமைத்தல் மற்றும் வலுப்படுத்துதல் துணைக்குழு

1. சுய உதவி குழு இணையாக வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழும் மக்கள் மற்றும் ஊரக வேலை உறுதி அளிப்பு திட்ட பணியாளர்களைக் கொண்டு புதிய குழுக்கள் அமைக்க வேண்டும்.

2.அனைத்துக் குழு உறுப்பினர்களும் உரிய காலத்தில் பயிற்சி பெறுவதை உறுதி செய்ய வேண்டும்.

3. வலுவிழந்த / செயல்படாத குழுக்களின் எண்ணிக்கை, செயல்படாததற்கான காரணம் மற்றும் தீர்வு மேற்கொள்ளப்பட்டதற்கான விவரங்களை வைத்து அக்குழுக்களை இயங்கச் செய்ய வேண்டும்.

செயற்குழு உறுப்பினர்களின் பணிகள்

கண்காணித்தல் பணியை பொதுவாக பொறுப்பாளர்களைக் கொண்டு மேற்கொள்ளச் செய்ய வேண்டும். பொறுப்பாளர்கள் முறையாக பிற அமைப்புகளை கண்காணித்து அறிவுரைகள் வழங்கிய விவரத்தினை செயற்குழுவில் பதிவு செய்ய வேண்டும்.

குடியிருப்பு மன்றம் சுய உதவி குழுவிலிருந்து பெறப்பட்ட அறிக்கைகளை செயற்குழு கூட்டத்தில் வைத்து விவாதிக்க வேண்டும்.

கண்காணித்தல்

சுய உதவி குழுக்களை - கண்காணித்தல் வழிமுறைகள்:

ஒர் அமைப்பானது / நிறுவனமானது பல்வேறு செயல் திட்டங்களைத் தீட்டிச் செயல்படுத்தும் போது அச்செயல்பாடுகளை தொடர் கண்காணித்து வழிப்படுத்தும் போதுதான் அச்செயல்பாட்டினால் நல்ல முறையில் விளைவுகள் / பயன்கள் ஏற்படுகிறது.

கண்காணிப்பதற்கான கீழ்வரும் பல்வேறு வழிமுறைகளை பயன்படுத்தலாம்:

அறிக்கைகள் பெறுதல்.
களப்பார்வை
இடைநிலை மதிப்பீடு
ஆய்வுகள்
ஆவணப்படுத்துதல்

கண்காணித்தலின் போது கவனத்தில் கொள்ள வேண்டியவை:

1. குடியிருப்பு மன்ற அளவில் தகுதி உள்ள அனைத்துக் குழுக்களும் குடியிருப்பு மன்றத்தில் இணைக்கப்பட்டுள்ளதை உறுதி செய்தல்

2. குடியிருப்பு மன்ற செயல்பாடுகள் இலட்சியம் மற்றும் நோக்கங்களின் அடிப்படையில் செயல்படுவதை தொலை நோக்குப் பார்வையுடன் கண்காணித்தல்

3. கூட்டமைப்பின் நோக்கங்களின் அடிப்படையில் வரையறுக்கப்பட்டுள்ள செயல்பாடு குறிப்பிட்ட காலத்திற்குள் நிறைவேற்றப்பட்டுள்ளதை உறுதி செய்தல்

4. நிறைவேற்றப்பட்டுள்ள செயல்பாடு வரையறுக்கப்பட்டுள்ள இலக்கு மக்களை சென்றடைந்தவற்றை உற்று கவனித்தல்

5. வரையறுக்கப்பட்டுள்ள செயல்பாடுகளின் அடிப்படையில் நிறை குறைகளை ஆராய்ந்து ஆய்வின் அடிப்படையில் குறை இருப்பின் தக்க ஆதாரங்களுடன் சுட்டிக் காட்டுதல்

6. புதிய குழுக்கள் அமைத்தல் மற்றும் நலிவுற்றக் குழுக்களை வலுப்படுத்துதல் பற்றிய விபரங்கள் உள்ளாதா என கண்காணித்தல்

7. அனைத்துக் குழுக்களுக்கும் பயிற்சி, தரம் பிரித்தல், வங்கிக் கடன் இணைப்பு செய்யப்பட்டுள்ள விவரங்கள் அடங்கிய பட்டியல் சரிபார்த்தல்

8. சுய உதவி குழுக்களிலிருந்து பெறப்பட்ட கடன் மனுக்களை உரிய முறையில் பெறப்பட்டுள்ளதா என அறிதல்

9. குடியிருப்பு மன்ற அளவிலான மாதாந்திர அறிக்கை கூட்டமைப்பிற்கு முறையாக அனுப்பப்பட்டுள்ளதா என்பதைக் கண்காணித்தல்

10. கூட்டமைப்பில் மேற்கொள்ளப்பட்ட முடிவுகள் / தீர்மானங்கள் குழுக்களுக்கு முறையாக தெரிவிக்கப்பட்டுள்ளதா என ஆய்வு செய்தல்.

11. குடியிருப்பு வாரியாக தொழில் செய்திட வளங்களை வரிசைப்படுத்தி அடையாளம் கண்டறிந்தவற்றை கண்காணித்தல்

12. அனைத்து குழுக்களின் உறுப்பினர்களுக்கும் காப்பீடு செய்யப்பட்டுள்ளதை குடியிருப்பு நிர்வாகிகள் உதவியுடன் கண்காணித்தல்

13. குழுக்கள் பெற்ற கடன் தொகையை தவணை தவறாமல் திரும்பச் செலுத்துவதை தொடர் கண்காணிப்பு செய்தல்

14. குழுக்கள் மூலம் உற்பத்தி செய்யப்படும் பொருட்களுக்கு முறையான விற்பனை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதை கண்காணித்தல். 

குழு செயல்பாடுகளை கண்காணித்தல்

ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு / குடியிருப்பு அளவிலான மன்றம் / சுய உதவி குழு செயல்பாடுகளை கண்காணித்தல்

கண்காணித்தல் :

கூட்டமைப்பு தங்கள் இலட்சியத்தை அடைவதற்காக திட்டமிடும் பணிகள் உரிய காலத்தில் பயனுள்ள வகையில் நிறைவேறியுள்ளதா என்பனவற்றை அறிந்து கொண்டு அவ்வப்போது தொடர் நடவடிக்கைகளை செய்து கொள்ளுதலே கண்காணிப்பு ஆகும்.

கடந்த கால கூட்டமைப்புகள், உறுப்பினர் குழுக்களை சரிவர நிர்வகிக்க இயலாத காரணத்தினாலும், தொடர் கண்காணிப்பு, மற்றும் வழிகாட்டுதல் இல்லாமையால் சுய உதவி குழுக்கள் செயல்பாட்டில் கூட்டமைப்பின் பங்கு மிகக் குறைந்தளவே காணப்பட்டது. மேற்கண்ட குறைகளை களைய, ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகள், சுய உதவி குழுக்கள் மூலமாக கீழ்க்கண்ட செயல்பாடுகளில் ஈடுபட வேண்டும்.

அவை:

1. கண்காணித்தல்
2. வழிகாட்டுதல்
3. செயல்பாடுகளுக்குத் துணைபுரிதல்

கண்காணித்தல்

1. உறுப்பினர் குழுக்கள் முறையான வாரக் கூட்டங்கள் நடத்துவதையும், வார சேமிப்பு செய்வதையும் கண்காணித்தல்

2. பதிவேடுகள் அனைத்தையும் முறையாகப் பராமரிப்பதைக் கண்காணித்தல்
குழுக்கள் அவ்வப்போது வங்கிக்குச் சென்று பணம் செலுத்தியபின் செலவுகள் செய்வதைக் கண்காணித்தல்

3. குழுக்களின் அனைத்து செயல்பாடுகளையும் கண்காணித்தல்.
அதாவது, உள்கடன் வழங்குதல், கடன் திருப்பம், வட்டி வீதம் கணக்கிடுதல்,

5. வெளிக்கடன் பெற்று முறையாகச் செலுத்துதல் போன்றவற்றைக் கண்காணித்தல்

6. குழுக்கள் செய்யும் தொழில்கள் / வருமானம் ஈட்டக் கூடிய தொழில்களைக் கண்காணித்தல்

வழிகாட்டுதல்:

1. குழுக்களின் கூட்டம் நடத்தும் முறைக்கு வழிகாட்டுதல். (தகவல், நிகழ்ச்சி நிரல், கூட்டத்தில் செய்ய வேண்டியவை, செய்யக் கூடாதவை போன்றவை.)

2. குழுவின் செயல்பாடுகளில் உறுப்பினர்கள் பங்கேற்பை அளிப்பதற்கு வழிகாட்டுதல்

3. உள்கடன் வழங்கலை முன்னுரிமைப்படுத்துவதற்கும், வட்டி கணக்கிடும் முறைகளுக்கும் வழிகாட்டுதல்

4. உள் தணிக்கை, வெளித் தணிக்கை செய்தல் போன்றவைகளுக்கு வழிகாட்டுதல்குழுக்கள் கூட்டாகத் தொழில்கள் செய்ய வழிகாட்டுதல்

5. குழுக்கள் அவற்றின் விதிமுறைகளிலிருந்து விலகாமல் செல்வதற்கு வழிகாட்டுதல்

6. குழுக்களின் பொதுநிதியை அதிகப்படுத்துவதற்கும் வழிகாட்டுதல்

7. குழுக்களின் சீரான நிதி நிர்வாகத்திற்கு வழிகாட்டுதல்

செயல்பாடுகளுக்குத் துணைபுரிதல்:

1. உறுப்பினர்கள் சேமிக்கும் பழக்கத்தை மேம்படுத்த (சேமிப்பை அதிகரிக்க) குழுக்களின் கூட்டங்களில் கலந்து கொண்டு அறிவுரை வழங்குதல்.

2. பதிவேடுகள் பராமரித்தலில் காணப்படும் குறைபாடுகளைச் சுட்டிக்காட்டி அவற்றைக் களைய நடவடிக்கை எடுத்தல்.

3. உள் தணிக்கை மற்றும் வெளித் தணிக்கைகளில் சுட்டிக்காட்டப்பட்ட குறைபாடுகளைக் களையத் துணைபுரிதல்.

4. விருப்ப சேமிப்பு நிர்ணயிக்கப்பட்ட சேமிப்பு முறைகளை எடுத்துக் கூறி விருப்ப சேமிப்பு செய்யத் துணைபுரிதல்.

5. குழுக்கள் செய்யும் தொழில்களில் தொழில் நுட்பங்கள், தொழில் திறன்கள், மூலப்பொருட்கள் போன்றவை கிடைக்கத் துணை நிற்றல்.

6. குழுக்களின் உற்பத்திப் பொருட்களுக்கு விற்பனை வாய்ப்புகள் கிடைத்திட துணைபுரிதல்.
கண்காட்சிகள் / பொருட்காட்சிகளில் கலந்து கொண்டு சந்தை வாய்ப்புகளைப் பெற துணை நிற்றல்.

நுண் கடன்

சுய உதவி குழுக்களுக்குத் தேவையான நிதியினைத் தொண்டு நிறுவனங்கள் மற்றும் நுண் நிதி நிறுவனங்கள் வழங்கி வருகின்றது. இத்தகைய கடன் வழங்கும் நிறுவனங்கள் நுண் நிதி நிறுவனங்கள் என அழைக்கப்படுகிறது.

நுண் நிதியின் முக்கியத்துவம்

1. சிறப்பாக செயல்படும் சுய உதவி குழு / ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகளை ஊக்கப்படுத்திட

2. கூட்டமைப்பின் பொதுநிதியினை அதிகரித்திட

3. உள்கடன் வாய்ப்புகளை அதிகரித்திடஉறுப்பினர்களின் சிறுகடன் / பெருங்கடன் தேவைகளைப் பூர்த்தி செய்திட

4. கூட்டமைப்பில் நிதிகையாளும் திறனை மேம்படுத்தி, முன் உதாரணமாகச் செயல்படுத்திட

5. நுண் கடன் பெறுவதில் நன்மைகள்:

6. நுண் நிதி நிறுவனங்கள் மூலம் பெறப்படும் கடன் திரும்பச் செலுத்தும் அட்டவணையானது மிகவும் குறுகிய கால வரையறைக்குட்பட்டது

7. அரசு மற்றும் அரசு சாரா நிறுவனங்களைத் தவிர நேரிடையாக, நுண் நிதி நிறுவனங்களிடமிருந்து பெறப்படும் கடன்

8. கடன் வழங்கும் முறை மிக எளிதாக இருக்கும்.

9. கடன் தேவைக்கு அடமானம் ஏதும் தேவையில்லை.

10. ஒரு சில நிறுவனங்கள் நேரடியாகவே உறுப்பினர்களுக்குக் கடன் வழங்கி வருகிறது.

11. அரசுடமையாக்கப்பட்ட வங்களின் வட்டி விகிதத்தை விட அதிகமாக இருக்கும்.

12. நுண் நிதி நிறுவனங்கள் நேரிடையாக, சமுதாய சார்ந்த அமைப்புகளான சுய உதவி குழு/ கூட்டமைப்புடன் நேரடித் தொடர்பு.

13. நுண் நிதி மூலம் பெறப்படும் நிதி பெறுவதற்கான நடைமுறைச் செலவினமானது, நிதி பெறுபவருக்கும், நிதி அளிக்கப்படுபவருக்கும் மிகவும் குறைவு.

14. நுண் நிதி தொடர்பு, ஒரு குழுவை, கூட்டமைப்பினை மட்டும் சார்ந்திருத்தல்

15. நுண் கடன் மூலம் ஏற்படும் தீமைகள்

16. சுய உதவி குழு / கூட்டமைப்பு கோட்பாடுகளின் அடிப்படையில் செயல்படாமை

17. மகளிர் முன்னேற்றத்தினை விட நிதி பரிமாற்றத்திற்கே முக்கியத்துவம் தரப்படும்

18. அதிகப்படியான வட்டி

19. கடன் திருப்பிச் செலுத்தும் முறையானது வாரம், 15 தினங்களுக்கு 1 முறை, மாதம் ஒரு முறை சேமிப்பை பற்றிய விழிப்புணர்வு குறைந்து காணப்படுதல் 

20. மறைமுகமான வட்டி விகிதம் / வட்டி நிர்ணயம் (உணம்) நுழைவுக்கட்டணம், வட்டி காலதாமத்திற்கான அதிக வட்டி, விண்ணப்ப பரிசிலனைக் கட்டணம் மற்றும் இதர

21. நுண் நிதி மூலம் பெறப்படும் கடன் பெரும்பாலும், கடன் பெறுபவரின் சுய தேவைகளுக்காக பயன்படுத்தப்படுகிறது.

22. சுய உதவி குழு / கூட்டமைப்பினை பொருளாதார ரீதியாக, தன்னிறைவு அடையச் செய்வதற்கு முக்கியத்துவம்

நிதிப்பயன்பாட்டினை கண்காணிப்பு செய்வதில் குறைபாடு.

வங்கி நேரடிக் கடன்

வங்கி நேரடிக் கடன் (Bank Direct Linkage)விளக்கம்: மானியம் எதுவும் இல்லாமல் வங்கிகள் நேரடியாகவே சுய உதவி குழுக்களுக்குக் கடன் வழங்கித் திரும்ப பெறுதலையே வங்கி நேரடிக் கடன் என்கிறோம்.

நேரடிக் கடன் பெறுவதற்கான நடைமுறைகள்:

1. தரம்பிரித்தல் முடிந்தவுடன் தரம்பிரித்தல் படிவத்துடன் வங்கியை அணுகி கடன் பெறலாம்.

2. குழுவின் சேமிப்பின் மடங்குகளின் அடிப்படையில் கடன் தொகை கிடைக்கும்.

3. தரம் பிரித்தல் முடித்த பிறகுமுதல் 
கடன் ரூ. 50,000/-
2-ம் கடன் ரூ. 1,00,000/-
3-ம் கடன் ரூ. 1,50,000/-
4-ம் மற்றும் அதற்கு மேல் கடன் – குழுவின் தேவைக்கேற்ப என்ற அடிப்படையில் குறைந்தபட்சக் கடனாக வங்கிகள் வழங்க வேண்டும்.

4. வங்கிக் கடன் பெறுவதற்கு குழுவின் தீர்மானம் முக்கியத் தேவையாகும்.

5. நேரடிக் கடனைப் பயன்படுத்தும் முறைகள் மற்றும் திருப்புச் செலுத்தும் முறை:

5. நேரடிக் கடனை உறுப்பினர்கள் நுகர்வுச் செலவுகளுக்குப் பயன்படுத்தலாம்.

6. ஒவ்வொரு உறுப்பினரும் செய்ய விரும்பும் / செய்யும் தொழிலுக்கு ஏற்ப பயன்படுத்திக் கொள்ளலாம்.

7. பெரும்பாலும் குறுகிய கால முறைக் கடன்களாக வழங்கப்படுகின்றன.

8. நேரடிக் கடன் மூலம் பெற்ற தொகையை, அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக வழங்க முடியும்.

9. வங்கி நிர்ணயித்துக் கொடுக்கும் வட்டியின் அளவுக்கோ அல்லது கூடுதலாக ஒரு சதவீத வட்டியைச் சேர்த்தோ உறுப்பினர்களுக்குக் கடன் வழங்கலாம்.

10. குழு உறுப்பினர்களுக்கு கடன் கொடுத்து விட்டு வசூல் செய்யும் போது அசலுடன் குறிப்பிட்ட வட்டியையும் சேர்த்தே வசூலிக்க வேண்டும்.

11.வட்டி வசூல் செய்யாமல் அசலை மட்டும் வசூல் செய்து, திரும்பச் செலுத்தினால் பிறகு வட்டிக் கணக்கிற்கு தொகையைச் செலுத்த குழு சேமிப்புக் கணக்கில் எடுத்துச் செலுத்த வேண்டியிருக்கும். இதனால் தேவையற்ற பிரச்சனைகள் உருவாகும். இதனைத் தவிர்க்க வட்டியை முறையாக, சரியாகக் கணக்கிட்டு வசூலிக்க வேண்டும்.

சுழல் நிதி (Revolving Fund)

விளக்கம்: சுழல்நிதி என்பது சுய உதவி குழுக்களின் தொகுப்பு நிதியை மேம்படுத்தவும், நிதி மேலாண்மை, கடன் மேலாண்மைத் திறன்களை மேம்படுத்தவும் அரசுத் திட்டங்களின் கீழ் வழங்கப்படும் தொகையாகும். அரசால் வழங்கப்படும் ரூ. 10,000/- தொகையுடன் வங்கிகள் தங்கள் பங்குக்கும் கடனாக குறைந்தபட்சம் ரூ. 50,000/- சேர்த்து வழங்குகின்றன. சுழல்நிதிக் கடன் வசதி ரொக்கக் கடனாக சுய உதவி குழுக்கள் நிரந்தரமாகப் பயன்படுத்தும் வசதியாகும்.குழுக்கள் இந்நிதியிலிருந்து எத்தனை முறை வேண்டுமானாலும் அனுமதிக்கப்பட்ட கடன் தொகைக்கு மிகாமல் கடன் பெற்றுக் கொண்டே இருக்கலாம். ஒவ்வொரு முறையும் கடன் பெற்று திரும்பச் செலுத்திவிட்டு அக்கடன் கணக்கிலேயே தொடர்ந்து கடன் பெறலாம். இதனால் தான் இக்கடன் நிதி “சுழல் நிதி”என அழைக்கப்படுகிறது.

சுழல் நிதியைப் பயன்படுத்தும் முறைகள்:

1. சுழல் நிதி ரொக்கக் கடன் கணக்காக வழங்கப்படுவதால், ஒரு முறை கடன் பெற்றுத் திரும்பச் செலுத்தியவுடன் கடன் கணக்கை முடித்துக் கொள்ளக் கூடாது.

2. குழுவின் ஆயுள் காலம் வரைக்கும், மீண்டும் மீண்டும் மறுகடன் முறையில் பயன்படுத்த வேண்டும்.

3. பெற்றகடன் தொகை முழுவதும் செலுத்துவதற்கு முன்னரே தேவையின் அடிப்படையில் கட்டிய தொகையின் அளவில் மீண்டும் பெற்றுக் கொள்ளலாம்.

4. அரசு வழங்கிய மானியத் தொகை ரூ. 10,000 /- த்திற்கு வங்கிகள் வட்டி ஏதும் எச்சூழலிலும் வசூலிக்கக் கூடாது.

5. சுழல் நிதியை குழுவின் பொது நிதியுடன் ஒன்றாகச் சேர்த்தும் உறுப்பினர்களுக்கு கடன் வழங்கலாம்.

6. சுழல் நிதிக் கணக்கை, குறுகிய காலக் கடனாகக் கணக்கிடக் கூடாது.

7. சுழல் நிதி மானியத்தினை சுய உதவி குழுக்கள் முன்பு பெற்ற கடனுக்காக ஈடு செய்யக் கூடாது.

8. சுழல் நிதி மூலம் உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் கடன் தொகைக்கு வட்டித் தொகையுடன் சேர்த்தே அசல் வசூலிக்கப்பட வேண்டும்.

9. சுழல் நிதி மானியத்தைப் பெற்ற உடனே குழு உறுப்பினர்கள் அதைப் பிரித்து வைத்துக் கொள்ளக் கூடாது.

10. சுழல் நிதிக் கணக்கிற்கு என குழுவில் தனியாக கணக்கு பராமரிக்கப்பட வேண்டும்

குழுக் கூட்டத்தின் முக்கியத்துவம்

குழுவின் தொடர்ந்த செயல்பாட்டிற்கு குழுக் கூட்டம் அவசியம்.

கூட்டத்திற்கு வருகை தரும் உறுப்பினர்கள் பல தகவல்களைப் பெறவும், விழிப்பிணர்வு அடையவும் வழி வகை செய்கிறது.

சேமிப்பு, தொழில் முனைப்பு போன்ற செயல்பாட்டிற்கு கூட்டம் மிகவும் அவசியம்.

திட்டமிட, ஆண்டுச் செயல் திட்டம் தயாரிக்க பெரிதும் உதவுகிறது.

உறுப்பினர்கள் கருத்துப் பரிமாற்றம் செய்யவும், இணக்கமான அணுகு முறையைப் பெறவும் குழுக் கூட்டம் உதவிகிறது.

கிராம மேம்பாட்டிற்கும், சுய முன்னேற்றத்திற்கும், குழுக் கூட்டமே அடிப்படை.

சீராக, தொடர்ந்து குழுக் கூட்டம் நடத்தி முறையான தீர்மானங்கள் இயற்ற, ஏற்ற களமாக அமைவது குழுக் கூட்டமே.

 ஊக்குனர்கள் & பிரநிதிகள் பெற்ற பயிற்சியை அனைவரிடமும் பகிர்ந்து கொள்ள ஏதுவாகிறது.

வாரக் கூட்டம் நல்ல பலனைத் தரும்.
சுய உதவிக்குழு பொறுப்பாளர்களின்

 பொறுப்புகள் :
ஊக்குனர்களின் பெறுப்புகள் :
1. ஊக்குனர்கள், பொறுப்பு மிக்க தாயாக இருந்து, குழுவை கட்டிக் காத்தல்.

2. குழுவை முறையாக நடத்த, வேண்டிய வழிமுறைகளைக் கடைப்பிடித்தல்.

3. குழுக் கூட்டங்களை தவறாமல் நடத்துதல்.

4. குழுக் கூட்டங்களில் உறுப்பினர்கள் கலந்து கொள்ள ஊக்குவித்தல்.

5. உறுப்பினர்களிடையே நல்லுறவு மற்றும் ஓற்றுமையை மேம்படுத்துதல்.

6. குழுக் கூட்டத்தில் விவாதிக்கும் கருத்துகளையும், தீர்மானங்களையும் பதிவு செய்தல்.

7. குழுவின் பதிவேடிகளை முறையாக பராமரித்தல்.

8. குழுக் கணக்கினை ஆண்டு தணிக்கைக்கு ஏற்பாடு செய்தல்.

9. தணிக்கை மற்றும் தரம் பிரித்தலுக்குப் பிறகு அறியப்பட்ட குறைகளை நிவர்த்தி செய்தல்.

10. ‘கிராம சபா’ கூட்டங்களில் உறுப்பினர்கள் கலந்துக் கொள்ள ஆர்வமூட்டல்.

11. ’ஆண்டுச் செயல் திட்டம் ‘ தீட்டி செயல்பட ஊக்குவித்தல்.

12. பயிற்சியில் அறிந்து கொண்ட கருத்துகளை உறுப்பினர்களுடன் பகிர்ந்து கொள்ளல்.

13. குழு வெளிக்கடன் பெற, கடன் பெறுவதற்கான மதிப்பீட்டிற்கு (Credit Rating) தயார் செய்தல்.

14. உறுப்பினர்களிடையே எண்ணறிவு, எழுத்தறிவினை மேம்படுத்துதல்.

15. பஞ்சாயத்து / வட்டார அளவிலான குழுக் கூட்டங்களில் கலந்துக் கொள்ள உறுப்பினர்களை தவறாமல் அனுப்புதல்.

16. குழுவின் நிதிநிலைமையை உறுப்பினர்களுக்கு அவ்வப்போது தெரியப்படுத்துதல்.

17. கிராம அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்ய உறுப்பினர்கள் மற்றும் கிராம மக்களின் ஓத்துழைப்பைப் பெறுதல்.

18. வங்கியின் உதவிகள், அரசு நலப்பணிகள் யாவும் பெற வழிவகை செய்கிறது.

ஆ. பிரதிநிதிகளின் பொறுப்புகள் :

1. தவறாமல் குழுக் கூட்டம் நடத்த ஊக்குனருடன் இணைந்து செயல்படுதல்.

2. சேமிப்பு, கடன்வசூல் இதர பிற பணத்தை வசூல் செய்தல், வங்கியில் செலுத்துதல்.

3. குழுவின் வங்கிக் கணக்கை ஊக்குனருடன் இணைந்து துவக்குதல்-இயக்குதல்.

4. குழு உறுப்பினர்களுக்கு ஏற்ற பொறுப்புகளைப் பகிர்ந்து அளித்தல்.

5. பயிற்சியில் பெற்ற கருத்துகளை உறுப்பினர்களிள் மத்தியில் பகிர்ந்து கொள்ளுதல்.

6. உறுப்பினர்களையும் பயிற்சியில், கூட்டங்களில் கலந்து கொள்ள ஆர்வமூட்டுதல்.

7. ஊக்குனர் இல்லாத நேரத்தில் அவரின் பொறுப்பை ஏற்று நடத்துதல்.

8. ஊக்குனருடன் இணைந்து குழுக் கணக்குப் பதிவேடுகளைப் பராமரித்தல்.

9. பெற்ற கடனை முறையாக பயன்படுத்தவும், திருப்பி செலுத்தவும் முன் மாதியாக இருந்து உறுப்பினர்களை ஊக்கப்படுத்துதல்.

10.பிரச்சனைகளுக்குத் தீர்வு காண வழி காட்டுதல்.

11. உறுப்பினர்கள் குழுவின் விதிமுறைகளை மீறாமல் பார்த்துக் கொள்ளுதல்.

12. குழுவின் பிரதிநிதியாக பஞ்சாயத்து / வட்டார அளவிலான குழுக் கூட்டமைப்புக் கூட்டங்களில் கலந்து கொள்ளுதல்.

13. அரசு மற்றும் பிற நிறுவனங்களுடன் தொடர்பு கொண்டு நலத் திட்டங்களைப் பெற உறுப்பினர்களை ஆர்வ மூட்டுதல்.

14. சமூக மற்றும் கிராம வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்த உறுப்பினர்களை ஒருங்கிணைத்து வழி நடத்துதல்.

15. குழுவிற்கு ஆதரவாகவும் நல்ல வழி நடத்துனராக செயல்படுதல்.

இ. உறுப்பினர்களின் பொறுப்புகள்:

1. பொறுப்புமிக்க உறுப்பினர்களாக இருத்தல்.குழுக் கூட்டங்களில் தவறாமல் கலந்து கொள்ளுதல்.

2. அவரவர் கருத்துக்களையும், தகவல்களையும் சுகந்திரமாக வெளிப்படுத்துதல்.

3.சேமிப்பு, சந்தா, கடன், வட்டி ஆகியவற்றை தவறாமல் செலுத்துதல்.

4. தாம் வாங்கிய கடனை கண்ணியமாக, தவனை தவறாமல் திருப்பி கொடுத்தல்.

5. மற்ற சக உறுப்பினர்களிடம் நல்ல ஓற்றுமை, நல்லுறவு போன்ற பண்புகளை வளர்த்துக் கொள்ளுதல்.

6. சுழற்சி முறையில் வங்கிக்குச் சென்று வருதல்.

7. மகளிர் திட்டம் மற்றும் பிற துறைகளின் மூலம் அளிக்கப்படும் பயிற்சிகளில் கலந்து கொள்ளுதல்.

8. தமக்களிக்கப்பட்ட பொறுப்புகளைத் தன்னார்வத்துடன் ஏற்று நிறை வேற்றுதல்.

9. குழுவின் நிலை, தரம், யாவும் அறிந்து இருத்தல்.

10. சமூக மற்றும் கிராம முன்னேற்ற செயல்பாடுகளில் முழுமையாக ஈட்டுபட்டு செயலாற்றுதல்.
“கிராம சபா”- கூட்டங்களில் தவறாமல் கலந்து கொள்ளுதல்.

11. குழுவில் பிரச்சனைகள் ஏற்பட்டால், உடனே விவாதித்து சரியான தீர்வினைக் காண உதவுதல்.

12. பொதுவாக ஏனைய குழுக்களுக்கு முன் மாதிரியாக, சிறந்த குழுவாக திகழப் பாடுபடுதல்.

13. ஊக்குனர், பிரதிநிதிகளின் சரியான செயல்பாடுகளுக்கு சீரிய ஓத்துழைப்பு தந்து சிறப்பாக குழுவினை வழி நடத்திச் செல்ல உதவுதல். 

14. எல்லா உறுப்பினர்களும் எண்ணறிவும், எழுத்தறிவும் பெற்றுத் திகழ முனைதல்.

அடிப்டை விதிமுறைகள்

சுய உதவி குழு குழுவின் பொதுவான அடிப்டை விதிமுறைகள்:

1. சுய உதவி குழு உறுப்பினர்களின் தேர்வு, தகுதியின் அடிப்படையில், உரிய வகையில் செய்ய வேண்டும்.

2. வங்கிக் கணக்கு (Bank SB / Ac) குழுவின் பெயரில் ஆரம்பிக்க வேண்டும்.

3. குழுக் கூட்டம் வாரந்தோறும் குறிப்பிட்ட இடத்தில், குறிப்பிட்ட நேரத்தில், நாளில், குழு உறுப்பினர்களின் வசதிக்கேற்ப நடைப் பெற வேண்டும்.

4. குழு உறுப்பினர்களின் தேவையின் அடிப்படையில், கடன் வழங்கப் பட வேண்டும்.

5. குழுவால் நிர்ணயிக்கப்பட்ட தவணை மற்றும் வட்டியினை கடன் பெற்ற உறுப்பினர்கள் ஏற்க வேண்டும்.

6. கடன் பெற்ற உறுப்பினர்கள் கடனை குறிப்பிட்ட தவணைக்குள் வட்டியு டன் செலுத்த வேண்டும்.

7. குழுப் பிரதிநிதி, ஊக்குனரைக் கொண்டு குழு செயல்பட வேண்டும்.சமூக / கிராம மேம்பாட்டிற்கு குழு பாட வேண்டும்.

8. குழுவின் விதிமுறைகளை மீறுபவர்களுக்கு உறுப்பினர்களால் நிர்ணயிக்கப்பட்ட தொகையினை அபராதமாக விதிக்கலாம்.

9. ஒரு குழுவில் ஒரு குடும்ப நபர் மட்டுமே உறுப்பினராய் இருப்பது நலம்.
உறவுக்கார்கள் ஓரே குழுவில் உறுப்பினராய் இருப்பதைத் தவிர்த்தல் நலம்.

10. ஊக்குனர், பிரதிநிதி பொறுப்பானது சுழற்சி முறையில் இருக்க வேண்டும்.

11. உறுப்பினர்கள் அவரவர் விருப்பப்படி சேமிப்புத் தொகைக் கட்டலாம்.

12. ஆனால், அது தொடர்ந்த சேமிப்பாக இருக்க வேண்டும்.குழுவில் இருக்கும் உறுப்பினர் தாமாக விலகினாலும் அல்லது நீக்கப்பட்டாலும் அவர் குழுவின் பொது நிதியில் உரிமை கோர முடியாது. 

13. அவரின் சேமிப்பு தொகை மட்டுமே திருப்பித் தரமுடியும்.(சந்தா எக்காரணத்தை கொண்டும் திருப்பித் தர இயலாது)குழுக் கூட்டத்தின் இறுதியில் குழுவின் வரவு, செலவினை உறுப்பினர்களுக்கு தெரிவிக்க வேண்டும்.

14. குழுவின் கையிருப்புத் தொகை ரூ.100 க்கு மேற்படாமல் இருப்பது நல்லது. கையிருப்பை உறுப்பினர்களுக்கு தெரிவிக்க வேண்டும்.

15. கூட்டத்தின் முடிவில் உறுப்பினர்களிடம் இருந்து வசூலான பணத்தை அடுத்த நாளே வங்கியில் செலுத்த வேண்டும்.

சேமிப்பு

சேமிப்பு என்ற சொல்லைச் சொல்லும் போதே ஏதோ ஓரு பூரிப்பு நம் மனதில் எழுகிறது! இன்று மகளிரின் சேமிப்புப் பழக்கத்தை ஊக்கப்படுத்துவதே மகளிர் சுய உதவி குழுக்கள்தான். குழுவாக சேமிக்கும் போது ஓரு முனைப்பும், நல்ல பிணைப்பும் உண்டாகிறது. பிறசேமிப்புகளில் உள்ள குறைபாடுகள் யாவை? குழுவாக சேமிப்பதில் நன்னைகள் யாவை? சிக்கனத்தை கடைப்பிடித்து, சேமிப்பு பழக்கத்தினை எவ்வாறு மேம்படுத்தலாம்

சிறுதுளி பெருவெள்ளம்!

சேமிப்பு இல்லாத வீடு கூரை இல்லாத வீடு…!

சேமிப்பே உங்கள் முதல் செலவாக இருக்கட்டும்!

இன்றைய சேமிப்பு நாளைய முதலீடு!

போன்ற வாசகங்கள் சேமிப்பின் முக்கியத்துவத்தை உணர்த்துகின்றன. பொதுவாக சேமிப்பின் அவசியத்தை உணராதவர்கள் யாரும் இருக்க முடியாது. சேமிப்பு என்பது கொஞ்சம் கொஞ்சமாக பொருளையோ, பணத்தையோ சேர்த்து வைத்து, இல்லாத நேரத்தில் அதை பயன்படுத்துவது. சேமிக்க தெரியாதவர்கள் எதிர்கால வாழ்கையில் அல்லல் பட நேரும்.

ஆதாரம்: தமிழ்நாடு மகளிர் நல மேம்பாடு நிறுவனம்


கருத்துரையிடுக

குறை அல்லது நிறை எதாவது சொல்லிட்டு போங்க பாஸ்

புதியது பழையவை