Recent Posts

Labels

உதயம் மலர்

உதயம் மலர்

Contact form

Search This Blog

3/related/default
Developed by ❤️ - Blogger Templates at Piki Templates | Distributed by Free Blogger Templates

Made with Love by

Monster Template is Designed Theme for Giving Enhanced look Various Features are available Which is designed in User friendly to handle by Piki Developers. Simple and elegant themes for making it more comfortable

பல இரவுகள் பட்டினி பிடியில் வாடிய அம்பேத்கர் சட்டமேதையான வரலாறு!

20 ஜன., 2023

இந்தியாவின் சட்டப்புத்தகம் எழுதிய டாக்டர் அம்பேத்கர் அவர்களின் வாழ்க்கை வரலாறு இந்த தொகுப்பில் காணலாம்.


இந்தியா சுதந்திரம் அடைந்த பின் மக்களாட்சி கொண்டுவர பல தலைவர்கள் விரும்பினர். ஆனால், மக்களாட்சிக்கு மாறும் போது மன்னர் ஆட்சியில் இருந்த சட்டங்கள் செயல்படுத்த முடியாது. அதற்கு முறையாக அரசியல் சாசனம் வேண்டும்.



இந்திய மண்ணில், அரசியல் சாசனத்தினை எழுத நினைத்த அவர்களுக்கு முதலில் தோன்றிய பெயர் 'அம்பேத்கர்'. இந்தியாவில் இருந்து அமெரிக்கா சென்று உயர் கல்வி பயின்ற முதல் இந்தியர் அம்பேத்கர் தான்.

அவர், சட்டமட்டுமின்றி பொருளாதாரம், அரசியல், தத்துவம் மற்றும் உலக வரலாறு என அனைத்தையும் அறிந்த மேதையாக திகழ்தார்.



தாழ்த்தப்பட்ட சாதியில் பிறந்த அம்பேத்கர், தன்னுடைய வாழ்வில் சந்தித்த கசப்பான அனுபவத்தால் கடும் போராட்டத்திற்கும் மத்தியில் முன்னேறி உயர் நிலையை அடைந்தார். அவரது வாழ்க்கை வரலாறு இந்த கட்டுரையில் பார்ப்போம்.

பிறப்பு


அம்பேத்கர் இன்றைய மத்திய பிரதேசத்தில் உள்ள "மாவ்” எனும் இடத்தில் ராம்ஜி மாலோஜி சக்பால் - பீமாபாய் தம்பதியருக்கு 14வது குழந்தையாக 1891ஆம் ஆண்டு ஏப்ரல் 14ஆம் நாள் பிறந்தார். இவரது குடும்பம் மராத்திய வர்கத்திரை தழுவியது. அம்பேத்கருக்கு அவரது பெற்றோர் இட்ட பெயர் “பீமாராவ் ராம்ஜி”.இவர்கள், “மகர” என்னும் தாழ்த்தப்பட்ட வகுப்பினை சேர்ந்தவர்களாக இருந்தனர்.

அம்பேத்கரின், தந்தை மாலோஜி சாக்பால், ஆங்கிலேயரின் இராணுவத்தில் ஆசிரியராக பணிபுரிந்து வந்தார். அவர், வசித்த மோ பகுதியே இராணுவ தலைமையிடமாக செயல்பட்டு வந்தது. எனவே அம்பேத்கருக்கு இராணுவத்துடன் ஆரம்ப காலத்தில் நல்ல தொடர்பு இருந்து வந்துள்ளது.

விளையாட்டு தனத்தை துறந்து கல்வியில் ஆர்வம்


இராணுவத்தில் இருந்து ராம்ஜி மாலோஜி சக்பால் ஓய்வு பெற்ற போது அம்பேத்கருக்கு வயது இரண்டு. பின் குடும்பத்துடன், மத்திய இந்தியாவிலிருந்து கொங்கணத்திலி தபோலி என்ற ஊருக்கு குடியேறினர்.

அம்பேத்கருக்கு 5 வயது இருக்கையில், அவரது அண்ணனுடன் ஆரம்ப கல்வியை துவங்கினார். பின் ராம்ஜி சக்பால் பம்பாயில் குடியேறி சத்தராவில் இராணுவக் குடியிருப்பு வளாகத்தில் ஒரு வேலையில் அமர்ந்தார். சத்தாராவில் இவர்கள் குடியேறிய நேரத்தில் அம்பேத்கரின் தாயார் பீமாபாய் மறைவுற்றார்.

அம்பேத்கரும் அவருடைய அண்ணனும் பள்ளிக்கு செல்கையில், ஒரு சாக்குத் துண்டுடன் செல்வார்கள். வகுப்பின் மூலையில் அதை கீழே போட்டு அதன் மீது அமர்வார்கள். அவர்கள், இருவரின் குறிப்பேடையும் ஆசிரியர் தொடமாட்டார். பள்ளியில் தண்ணீர், இருக்கை, போன்ற பலவற்றில் மற்ற மாணவர்களிடம் இருந்து வேறுப்படுத்தி காட்டினர் ஆசிரியர்கள்.

இதனால், அம்பேத்கருக்கு படிப்பின் மீது ஆர்வம் குறைந்தது. தனது பொழுதுகளை விளையாட்டில் கழித்து வந்தார். அவரை வீட்டில் காண்பதே அரிதான நிகழ்வாகவே இருந்துள்ளது.

தந்தை மறுமணம்


அவரது தாய் மறைவிற்கு பின், தந்தை மறுமணம் செய்து கொண்டார். இது அம்பேத்கருக்கு பிடிக்கவில்லை. எனவே தனது தந்தையை சார்ந்திருக்க கூடாதென்று பாம்பேயில் (இப்போதைய மும்பை) நூற்பாலையில் வேலைக்கு சென்று தனது கவனத்தை படிப்பின் மீது செலுத்த தொடங்கினார். அதன் மூலம் தனது விளையாட்டு தனத்தை முற்றிம் துறந்தார். தொடர்ந்து படிப்பில் நல்ல முன்னேற்றம் காணத் துவங்கினார்.

கல்வி ஆர்வம்


அப்பாவின் துணையுடன், ஹோவர்ட் ஆங்கில பாடநூலைக் கற்றார். மேலும், புகழ்பெற்ற மொழிபெயர்ப்பு பற்றிய நூல்களையும் படித்தார். இதனால், மொழிபெயர்ப்பில் நல்ல தேர்ச்சி பெற்றிருந்தார்.

தொடர்ந்து அம்பேத்கர் பாடநூல்களை படிப்பதை விட மற்ற நூல்களை படிப்பதில் ஆர்வம் கொண்டிருந்தார்.

அவருடைய ஆசிரியர் ஒருவர், நீ படிப்பது வீண் என்று பலமுறை சொல்லிக்காட்டி சாதிய ரீதியில் தாக்கினார். இதனால், ஒருமுறை சினம் கொண்ட அம்பேத்கர், உங்கள் வேலையை நீங்கள் பார்த்து கொண்டு போங்கள் என்று பதிலடி கொடுத்தார் அம்பேத்கர். ஆனால், வாழ்நாள் முழுவதும் அம்பேத்கர், சமஸ்கிரதத்தை மொழிப்பாடமாக கற்க அனுமதிக்கப்படவில்லை.

1907ஆம் ஆண்டு உயர்நிலை பள்ளி மெட்ரிகுலேசன் தேர்வில் அம்பேத்கர் தேர்ச்சி பெற்றார். அப்போது தீண்ட தகாத மாணவர் ஒருவர் தேர்ச்சி பெற்றது பெரிய சாதனையாக பார்க்கப்பட்டது. அதற்காக அம்பேத்கருக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது.

கல்வி உதவி


தன் தந்தையின் விருப்பத்தினால் ஊக்கம் பெற்றிருந்த அம்பேத்கர் பம்பாயில் எல்பின்ஸ்டன் கல்லூரியில் சேர்ந்தார். ஒரு தீண்டப்படாதவருக்கு இது ஒரு புதிய அனுபவம். தொடக்கம் முதலே முனைப்புடன் படிக்கத் தொடங்கினார். இந்நேரத்தில் அம்பேத்கரின் தந்தைக்கு பண கஷ்டம் ஏற்பட்டது. அப்போது பரோடா மன்னர் தீண்டதகாத சிறந்த மாணவர்களுக்கு படிக்க உதவுவதாக அறிவித்திருந்தார். அதை கேள்விபட்டு அந்த உதவியை நாடினார் அம்பேத்கர். சாயஜிராவ் கெய்க்வாடு சிற்றரசர் இந்த வாய்ப்பு அம்பேத்கருக்கு கிடைக்க உதவினார்.

அதன்படி, அமெரிக்காவிலுள்ள கொலம்பியா பல்கலைகழகத்தில் மேற்படிப்புக்கு சென்றார் அம்பேத்கர். பதிலுக்கு படித்து முடித்தப்பின் 10 ஆண்டுகள் பரோட மன்னரின், அரசியலில் வேலை செய்யும் ஒப்பந்தத்தில் அம்பேத்கர் கையெழுத்திட்டார்.

அம்பேத்கருக்கு கொலம்பிய பல்கலைகழகம் புதிய அனுபவத்தை தந்தது. தினமும் 18 மணிநேரம் படிப்பில் கவனம் செலுத்தினார். 1915ஆம் ஆண்டு எம்.ஏ பட்டம்பெற்றார்.

பின் 1916ஆம் ஆண்டு இந்தியாவின் ஆதாயப் பங்கு ஒரு வாரலாற்று கண்ணோட்டம் என்ற ஆய்வு கட்டுரையை கொலம்பிய பல்கலைகழகத்தில் சமர்பித்து டாக்டர் பட்டத்தை பெற்றார்.

கல்லூரி படிக்கும் காலத்திலேயே அம்பேத்கரின் தந்தையும் இறந்தார்.

கல்வி காலத்தில் பணகஷ்டத்தில் பல நாட்கள் உணவு இன்றி படிப்பே உணவு என்று இருந்துள்ளார் அம்பேத்கர்.

தீண்ட தகாதவனின் அறிவுரையை ஏற்க மறுத்த மக்கள்...


பரோடா மன்னர் உதவித்தொகை நிறுத்திவிட்டதால்,அவருடைய எம்.எஸ். சி ஆய்வு பாதியிலேயே நிறுத்தப்பட்டது. அதன் பிறகு பரோடா மன்னரிடம் படைத்துறை தலைவாரக பணியாற்றினார்.

அங்கிருந்து, மும்பைக்கு திரும்பிய அம்பேத்கர், மாணவர்களுக்கு பாடம் கற்பிக்க துவங்கியதுடன், பத்திரங்களில் அறிவுரை வழங்க ஒரு நிறுவனத்தையும் தொடங்கினார். இதில் பல வாடிக்கையாளர்கள் ஒரு தீண்டதகாதவனின் அறிவுரை ஏற்க முடியாது என்று அவரிடம் வர மறுத்துவிட்டனர்.

ஆசிரியர் பணியை தொடர்ந்த அவரின் உரையை கேட்க பல மாணவர்கள் திரண்டனர்.

1921ஆம் ஆண்டு காலத்தில் தொழில்முறை பொருளாதார அறிஞராக பணியாற்றியவாறே மூன்று புத்தகங்கள் வெளியிட்டார்.

1923 ஆம் ஆண்டு வழக்கறிஞர்கள் சங்கத்தில் சேர்க்கப்பட்டாலும் வாதிடும் தொழிலுக்கு தீண்டாமை தடையாக இருந்தது.

அம்பேத்கர் பெயர் காரணம்


கதையா உண்மையா என்று சரியாக ஆதாரம் இல்லாத இரண்டு கதைகள் உள்ளன.

ஒன்று, அவர் கல்வி பயில உதவிய பார்ப்பன ஆசிரியரின் பெயரான அம்பேத்கர் என்பதை தன்னுடைய பெயராக மாற்றி கொண்டதாக கூறப்படுகிறது.

ஆனால், அம்பேத்கரின் குடும்ப பெயர் சக்பால். அவருடைய சொந்த ஊர் மகாராஷ்ரா மாநிலத்தில் இரத்தினகிரி மாவட்டத்தில் உள்ள அம்பாதவே. அதை அம்பேத் என்று சுருக்கி வழங்கி வந்துள்ளனர்.

அம்பேத்கர், தனது குடும்ப பெயரை குறிப்பிட வேண்டிய இடத்தில் சொந்த ஊரின் பெயரை குறிப்பிட்டுள்ளார். அப்போது பள்ளி நிர்வாகம், அம்பாதவே என்று பதிவு செய்வதற்கு பதிலாக அம்பேத்கர் என்று பதிவு செய்துள்ளதாக சில தகவல்கள் குறிப்பிடுகின்றன.

தாழ்த்தப்பட்ட மக்களுக்கு வாக்களிக்கும் உரிமை...


1927ஆம் ஆண்டு ”பகிஸ்கரிக் பாரத்” என்ற இதழை தொடங்கி தாழ்த்தப்பட்ட மக்களுக்கான குரலாக எழுதி வந்தார் அம்பேத்கர்.

அதே ஆண்டு தீண்டாமைக்கு எதிராக போராட துவங்கினார். பொது கிணற்றில் நீர் எடுப்பது, கோவில்களில் அனுமதி மறுப்பது உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு குரல் கொடுத்தார்.

1930-ல் லண்டனில் நடைபெற்ற வட்ட மேசை மாநாட்டில் கலந்து கொள்வதற்காகப் புறப்படுகையில், 'என் மக்களுக்கு என்ன நியாயமாகக் கிடைக்க வேண்டுமோ, அதற்காகப் போராடுவேன். அதே சமயத்தில் சுயராஜ்யக் கோரிக்கையை முழு மனதுடன் ஆதரிப்பேன்’ என்று கூறிச் சென்றார்

அந்த காலகட்டத்தில் இந்தியாவில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு வாக்களிக்கும் உரிமை மறுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், தாழ்த்தப்பட்டோருக்குத் தனி வாக்குரிமையும், விகிதாசாரப் பிரதிநிதித்துவமும் வழங்கப்பட வேண்டுமென டாக்டர் அம்பேத்கர் கடுமையாக வலியுறுத்தினார்.

1932ஆம் ஆண்டு இரண்டாவது வட்டமேசை மாநாடு லண்டனில் நடத்தப்பட்டது. அதற்கு அம்பேத்கருக்கு அழைப்புவிடுக்கப்பட்டிருந்தது. அதில், தாழ்த்தப்பட்டோருக்கு தனி உரிமை வேண்டும் என்று கோரினார், அதை காந்தி எதிர்த்தார்.

இதன் விளைவாக செப்டம்பர் 24 1932-ல் காந்திஜிக்கும், டாக்டர் அம்பேத்கருக்கும் இடையே 'பூனா ஒப்பந்தம்’ ஏற்பட்டது. இதன்படி தாழ்த்தப்பட்டோருக்கு தனி வாக்குரிமை என்பதற்குப் பதிலாக பொது வாக்கெடுப்பில் தனித்தொகுதி ஒதுக்கீடுகள் ஒத்துக் கொள்ளப்பட்டன.

1935ஆம் ஆண்டு அரசு சட்டக் கல்லூரியின் முதல்வராக நியமிக்கப்பட்டார். இந்த பதவியில் அவர் இரண்டு ஆண்டுகாலம் இருந்தார். பின் சுதந்திர தொழிலாளர் கட்சியை நிறுவினார். இந்த கட்சி 1937 ஆம் ஆண்டு மும்பை தேர்தலில் 14 இடங்களில் வென்றது.

1936ஆம் ஆண்டு “யார் இந்த சூத்திரர்கள்” என்ற தலைப்பில் புத்தகம் ஒன்றை எழுதினார். அதில் சாதிய ஒடுக்குமுறை, தீண்டாமை குறித்து கடுமையாக எழுதினார்.

இந்திய அரசியலமைப்பு


1947 ஆகஸ்ட் 15ஆம் தேதி இந்தியா சுதந்திரம் பெற்றுக்கொண்டபின், அரசியலமைப்பு எழுதும் பொறுப்பு அம்பேத்கருக்கு வழங்கப்பட்டது. அதில், சட்ட அமைச்சராகவும், அரசியலமைப்பின் வரைவுக் குழு தலைவராகவும் நியமிக்கப்பட்டார்.

1949ஆம் ஆண்டு நவம்பர் 26 நாள், அரசியல் அமைப்பு வரைவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. பின் 1950 ஜனவரி 26 அமல்படுத்தப்பட்டது.

1951ஆம் ஆண்டு இந்து நெறியியல் சட்டம் கொண்டு வருவது குறித்து நேருவுடன் ஏற்பட்ட கருத்து மோதல் காரணமாக பதவி விலகினார்.

பின் அடுத்த தேர்தலில், மக்களவை தொகுதியில் போட்டியிட்டார். அதில், தோற்றதை அடுத்து மாநிலங்களைவையில் நியமிக்கப்பட்டார். அவர், இறக்கும் வரை அந்த பொறுப்பை மட்டும் வகித்து வந்தார்.

இரண்டு திருமணங்கள்...


1906ஆம் ஆண்டு அம்பேத்கருக்கு 15வயது இருக்கும் போது 9 வயது ராமாபாய் என்பவருடன் திருமணம் நடந்தது. ராமாபாய் 1935ஆம் ஆண்டு இறந்தார்.

பின் 1948ஆம் ஆண்டு சாரதா கபீர் என்னும் சவிதா என்ற மருத்துவரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்தின் போது அம்பேத்கருக்கு வயது 57 சவிதாவுக்கு வயது 39.

மதமாற்றம்!


இந்து மதத்தின் வறட்டுக் கொள்கைகள் என்று விமர்சித்த அம்பேத்கர்...

1956ஆம் ஆண்டு மே மாதம் புத்தமும் தம்மமும் என்ற நூலை அம்பேத்கர் எழுதி முடித்தார். அதன்பின் தான் புத்த மதத்திற்கு மாறப்போவதாக அறிவித்தார்.

அக்டோபர், 14ஆம் தேதி மதம் மாற முடிவு செய்தார். அக்டோபர் 15 அன்று மிகப் பெரிய பொதுக்கூட்டத்தில் பேசிய அம்பேத்கர், புத்த மதத்தைத் தழுவியது ஏன் என்பதை விளக்கினார். “மனித குலம் எப்போதுமே தன்னுடைய நடத்தை, செயல்பாடுகள் குறித்து சுயமாக சிந்தித்துப் பார்த்து அவற்றை மேம்படுத்தி வந்துள்ளது. அனைத்து வகை முன்னேற்றத்திற்கும் மதம் முக்கியமானதாக உள்ளது.

இந்து மதத்தின் வறட்டுக் கொள்கைகள், ஹரிஜனங்களின் உயர்வுக்கு மிகப் பெரிய தடைக்கல்லாக இருக்கின்றன (ஹரிஜனங்கள் என்ற சொல்லை அம்பேத்கர் பயன்படுத்தவில்லை, ஆனால் பத்திரிகையில் அப்படிப் பதிவாகியிருக்கிறது). பிராமணர்கள், ஷத்திரியர்கள், வைசியர்களைத் தவிர மற்றவர்கள் உற்சாகமடைய இந்து மதத்தில் ஏதுமில்லை. எனவேதான், மிக முக்கியமான இந்த முடிவை எடுத்துள்ளேன்” என்று தெரிவித்தார்.

இது அந்நாட்களில் செய்திகளில் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது.

உயிர் நீர்த்த அம்பேத்கர்


நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டு வந்த அம்பேத்கருக்கு, 1955ல் உடல் நலம் மோசமடைய தொடங்கியது. தாழ்த்தப்பட்ட மக்களுக்காக தன்னுடைய வாழ்வையே அர்ப்பணித்த பாபாசாகேப் டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர், தனது 65 வயதில் 1956 டிசம்பர் 6ஆம் தேதி தில்லியிலுள்ள அவருடைய வீட்டில் தூங்கிக்கொண்டிருக்கும் பொழுதே காலமானார்.

அவரது உடல் ‘‘தாதர் சவுபதி’’ கடற்கரையில் தகனம் செய்யப்பட்டது. அம்பேத்கரின் மரணத்திற்கு பின், அவருக்குஇந்தியாவின் உயரிய விருதான ‘‘பாரத ரத்னா விருது’’ கடந்த 1990 ஆம் ஆண்டு வழங்கப்பட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறை அல்லது நிறை எதாவது சொல்லிட்டு போங்க பாஸ்