இ-சேவை மையம் நடத்த ஆர்வமுள்ள நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் இணையதளம் மூலம் வரவேற்கப்படுகின்றன. இணையத்தில் மட்டுமே விண்ணப்பங்களை பதிவு செய்ய இயலும். இந்த திட்டத்தைப் பற்றிய கூடுதல் தகவலைப் பெறவும், ஆன்லைனில் விண்ணப்பிக்கவும் www.tnesevai.tn.gov.in , tnega.tn.gov.in என்ற இணையதள முகவரியைப் பயன்படுத்தவும். ஏப்ரல் 14-ம் தேதி வரை காலை 11.30 மணி முதல் இரவு 8 மணி வரை மட்டுமே விண்ணப்பங்களை பதிவு செய்ய முடியும். கிராமப்புறங்களில் இ-சேவை மையம் செயல்படுத்துவதற்கான விண்ணப்பக் கட்டணம் ரூ.3000. நகர்ப்புறத்திற்கான கட்டணம் ரூ.6000 ஆகும்.
இந்த விண்ணப்பக் கட்டணத்தை ஆன்லைன் முறையில் மட்டுமே செலுத்த வேண்டும். மேலும் விண்ணப்பதாரர்களுக்கு உரிய பயனாளர் பெயர் மற்றும் கடவுச்சொல் ஆனது விண்ணப்பத்தில் கொடுக்கப்பட்ட தொலைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி மூலம் வழங்கப்படும்.
இந்த இ-சேவை மையம் தொடங்குவது தொடர்பாக அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
மிக விரைவில் புதிய பதிவுகளுடன் உங்களை சந்திப்பதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறோம் தெரிந்து கொள்வோம், தகவல்கள், தமிழக அரசின் புதிய திட்டங்கள், ஊராட்சி சட்டதிட்டங்கள் , வேலைவாய்ப்பு, பயனுள்ள தகவல்கள் என பல பதிவுகளுடன் மிக விரைவில்
எங்களுடன் இணைந்து இருங்கள்
Facebook | Twitter | Play Store
பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்